என் மலர்
நீங்கள் தேடியது "TV channels"
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் நாட்டின்மீது போர் தொடுத்தன.
- டிவி சேனல்கள் பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகளை வெளியிடுகின்றன.
புதுடெல்லி:
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் குறித்து சில டிவி சேனல்கள் டி.ஆர்.பி. மதிப்பீடுகளுக்காகத் தேவையற்ற பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகள் மற்றும் ஊடகத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், மக்களின் நலனுக்காக டிவி சேனல்களின் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகளை 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து, தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கினார். #India #Pakistan #TVChannel
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஒளிபரப்பப்படுவதை தடை செய்யக்கோரி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து, பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து, தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது நீதிபதி சாஹிப் நிஷார், “இந்தியா பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை சுருக்கிவிட்டபோது, நாம் ஏன் அவர்களுடைய சேனல்களுக்கு தடை விதிக்கக்கூடாது” என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலிகளில் இந்திய தொடர்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்டதும் பின்னர் 2017-ம் ஆண்டு லாகூர் ஐகோர்ட்டு அந்த தடையை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஒளிபரப்பப்படுவதை தடை செய்யக்கோரி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து, பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து, தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது நீதிபதி சாஹிப் நிஷார், “இந்தியா பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை சுருக்கிவிட்டபோது, நாம் ஏன் அவர்களுடைய சேனல்களுக்கு தடை விதிக்கக்கூடாது” என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலிகளில் இந்திய தொடர்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்டதும் பின்னர் 2017-ம் ஆண்டு லாகூர் ஐகோர்ட்டு அந்த தடையை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.






