எம்.ஜி.ஆர் அழிக்க நினைத்த கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் அடைக்கலம் புகுந்துள்ளார்- இ.பி.எஸ்

அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதலமைச்சர் ஆகலாம்.திமுகவில் உள்ள தொண்டர்கள் உயர்ந்த பதவி, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது.
எம்.ஜி.ஆர் அழிக்க நினைத்த கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் அடைக்கலம் புகுந்துள்ளார்- இ.பி.எஸ்
Published on

ஈரோடு பெருந்துறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

எவராலும் அதிமுகவை விழுங்கவோ, அழிக்கவோ முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தபோது அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ்.

அதிமுகவை வீழ்க்க பார்த்த ஓபிஎஸ் வீழ்ந்து விட்டார். திமுக உடன் சேர்ந்து அதிமுக அரசை கவிழ்க்க பார்க்க ஓ.பன்னீர்செல்வம் வீழ்ந்துவிட்டார்.

எம்ஜிஆர் அழிக்க நினைத்த கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் அடைக்கலம் புகுந்துள்ளார்.

ஓ.பன்னீசெல்வம் சென்ற இடம் ஆமை புகுந்த வீடு போல மாறிவிடும்.

அதிமுக அரசுக்கு இடையூறாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா ஆன்மா விரட்டிவிட்டது.

அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதலமைச்சர் ஆகலாம்.

திமுகவில் உள்ள தொண்டர்கள் உயர்ந்த பதவி, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது.

திமுகவுக்காக உதயநிதி ஸ்டாலின் உழைத்தாரா? சிறைக்கு சென்றாரா?

திமுகவில் உதயநிதிக்கு மட்டும் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் இருக்கும் வரை மக்களுக்கு நல்லது நடக்காது. துன்பம் தான் கிடைக்கும்.

தமிழகத்தில் கஞ்சா, போதை ஆசாமிகளால் முதியவர்கள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் போதை நடமாட்டம் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும். திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

உலக மகளிர் தினத்தன்று கூட நாமக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை என செய்தி வந்துள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com