search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Revenue"

    • பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 6,590 லட்சமாகும்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வேயின் வருவாய் ரூ.54,733 கோடியாக இருந்தது.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.31,634 கோடி வருவாயே கிடைத்தது. எனவே, அப்போதைய வருவாயைவிட தற்போதைய வருவாய் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.

    முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 6,590 லட்சமாகும். இது கடந்த ஆண்டு 6,181 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டைவிட 7 சதவீதம் அதிகமாகி உள்ளது.

    முன்பதிவு பயணிகள் பிரிவில் வருவாய் ரூ.42,945 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 48 சதவீதம் அதிகம் ஆகும்.

    முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கை சுமார் 45,180 லட்சமாகும். கடந்த ஆண்டு இது 19,785 லட்சமாக இருந்தது.

    வருவாயைப் பொறுத்தவரை ரூ.11,788 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.2,555 கோடிதான் கிடைத்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முன்பதிவு அல்லாத பிரிவில் 4 மடங்குக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

    • மதுரை கோட்ட ரெயில்வே வருமானம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் ரூ.280.80 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 78 சதவீதம் அதிகரித்து ரூ.502.05 கோடி வருமானம் ஈட்டப் பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ரூ.191.44 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம் 27 சதவீதம் அதிகரித்து, நடப்பாண்டில் ரூ.242.60 கோடியாக உயர்ந்துள்ளது.

    மதுரை கோட்ட ரெயில்களில் கடந்த ஆண்டு 9.2 மில்லியன் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.654.41 லட்சம் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் பயணச்சீட்டு இல்லாத, டிக்கெட் இன்றி வர்த்தக சரக்குகள் கொண்டு சென்ற, ரெயிலில் புகை பிடித்த, ரெயில் நிலையத்தை அசுத்தப்படுத்தி யவர்களிடம் இருந்து ரூ.834.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில்களில் 21 ஆயிரத்து 358 டன் சரக்குகளும், சரக்கு ரெயில்களில் 2.20 மில்லியன் டன் சரக்குகளும் கையாளப்பட்டு உள்ளன.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×