search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vikramaraja"

    • மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
    • சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    மதுரை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41-வது வணிகர் தினத்தையொட்டி, வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை விமான நிலையம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான கால் கோள் விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார். நிகழ்ச்சியில் மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்துத்து, மாநில தலைமைச் செயலாளர் பேராசியர் ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல், கூடுதல் மாநில செயலாளர் வி.பி.மணி உள்பட பல முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாவட்டச் செயலாளர் அழகேசன், பொருளாளர் லட்சுமி காந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மே மாதம் 5-ந்தேதி 41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கு லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டுக்கு பின்பு அமையக்கூடிய புதிய மத்திய அரசு எந்த அரசாக இருந்தாலும் வணிகர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். மேலும் இந்த மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், மும்பை, கேரளாவை சேர்ந்த முதலாளிகள் தமிழகத்தின் வணிகத்தை ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் வணிகர் மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாடு வணிகர்களின் பாதுகாக்கும் முயற்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டம் என்னும் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு முயற்சி எடுக்கும்.

    வணிகர் சங்க மாநாட்டில் அமைச்சர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு வேண்டிய பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வகையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட உள்ளது. அதற்காக தனிக்குழுவும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த கால்கோள் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு மாநாடு சிறப்பு பெற தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சி நிறைவில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    • அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
    • வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தேர்தல் நடைமுறை, அமலாக்கத்திற்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாகவே இன்றளவும் இருக்கின்றது. பறக்கும் படை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மருத்துவ செலவினங்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

    உண்மையாகவே தேர்தலில் கையூட்டு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித தகவலும் செய்திகளும் இல்லை.

    முரண்பாடான தேர்தல் நடத்தை விதிமுறைகளால், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது. இது சம்பந்தமாக இன்னும் இரண்டு தினங்களில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகுவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். தீர்வு எட்டப்படாமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தேர்தல் தேதியான ஏப்ரல் 19-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு அங்கேயே வெளியிடப்படும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவிப்பதாக மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    • மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல கூட்டம், கோவில்பட்டி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெறுவதை 3 ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றி தருவதாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இருக்கிறோம்.

    வணிக உரிமை பெறுவதற்கு கட்டிட உரிமையாளரும் வரி கட்ட வேண்டும், அதனை இணைக்க வேண்டும் என்பதனை தவிர்த்து உரிமத்தினை தனியாக வழங்க வேண்டும் என்பதனையும் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்க்க இருக்கிறோம். ஆகவே தான் மே 5-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    உற்பத்தியாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் அனைத்து கடைகளுக்கு ஒரே விலையில் பொருட்களை தர வேண்டும். அந்நிய நாட்டு சக்திகள் ஆன்லைனில் புகுந்து கொண்டு வணிகத்தினை சீரழிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்கின்றனர். அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாரபட்சம் இல்லமால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் பாரபட்சம் இல்லமால் செயல்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதனை அதிகளவு பயன்படுத்துவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    சிறு வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்து அதிகளவு அபராதம் விதிக்கின்றனர். பிளாஸ்டிக்குக்கு பதில் மாற்று எது என்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும். அதனை முறைப்படுத்த வேண்டும்.

    அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை வாங்கியுள்ளனர். மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகளிடம் எங்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள், மாநாட்டு தீர்மானங்கைள நிறைவேற்றி தருகிறோம் என்று யார் உறுதி அளிக்கிறார்களோ, அது குறித்து ஆலோசனை நடத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதனை தெரிவிப்போம்

    பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வணிகர்களை மிரட்டும் ரவுடிகள் மீது புகார் அளித்தால் கைது செய்யப்பட்ட சில நாள்களில் வெளியே வந்து மிரட்டும் சூழ்நிலை உள்ளது.

    தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் ரவுடியிசம் ஒழியும். வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். தவறு செய்யும் வணிகர்களுக்கு அவர்களின் பொருளாதரத்தினை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து தவறும் செய்யும் வியாபாரிகளை நீக்குவது என்று சங்கத்தில் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
    • ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரும் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை என்ற பெயரில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சினையில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்க கூடாது.

    ஊட்டி மார்க்கெட்டில் தற்போது கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் இங்கு பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வருபவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அவர்களுக்கு முறையான மாற்று இடம் அளிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு ஒரு நியாயம், வியாபாரிகளுக்கு ஒரு நியாயமா என்று தெரியவில்லை. ஆவின் பாலை மாற்று முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் வியாபாரிகளை அரசு அதிகாரிகள் துன்புறுத்தி வந்தால், மண்டலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    ஊட்டி மார்க்கெட்டில், தற்காலிக கடைகள் கட்டுவதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த நீலகிரி எம்பிக்கு நன்றி. அதேபோல், மார்க்கெட் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    • ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம்-வேண்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் குமார். இவரது மகன் விக்னேஷ்குமார்-உமா மகேஸ்வரி திருமணம் பொன்னேரியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

    மணமக்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநகராட்சிகளில் கடைகளுக்கு உரிமம் பெற கட்டிட உரிமையாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. கடைகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி உரிமம் தர வேண்டும். கடையை காலி செய்ய வேண்டுமென்றால் கட்டிட உரிமையாளர் வேண்டுமென்றே வரியை கட்டாமல் கடைக்கு சீல் வைக்கும் ஆபத்து உள்ளது.

    ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறோம். மே மாதம் புதிய அரசு அமைந்தவுடன் மீண்டும் சென்று வலியுறுத்த உள்ளோம். ஒட்டு மொத்தமாக 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை கடுமையாக ஏறியுள்ளது. பூண்டு விலை தற்போது சரிந்து வருகிறது.

    வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி குறித்து ஆய்வு செய்து பாராளுமன்ற தேர்தலில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும். கடைகளுக்குள் புகுந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதுகாப்பு குறித்து மே மாதம் நடைபெற்ற உள்ள வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 24 மணி நேரம் கடையை திறக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் போலீசார் கடைகளை மூட நிர்பந்திப்பது அபத்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பேரமைப்பு தலைவர் வில்லியம்ஸ், நந்தன், எஸ்.வி, முருகன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட கூடுதல் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் பால்ராஜ், கேசவன், ரமேஷ் கண்ணன், செங்குன்றம் வியாபாரிகள் சங்கதலைவர் செல்வகுமார், செல்லதுரை, அப்துல், காதர், வேலு, ஆச்சாரி, பால் பாண்டி, பாலகிருஷ்ணன், அஜிஸ், யுவராஜ், திராஜிதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும்.
    • வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா நடந்தது. நகரத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் கனகராஜ், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கடைவீதி பகுதிக்கு மேள தாளங்கள் முழங்க நடை பயணமாக சென்று பேசினார்.

    ஆன்லைன் வர்த்தகம் வணிகர்களை பெரிதும் பாதிக்கிறது. உணவு பாதுகாப்பு துறை வியாபாரிகளை மிரட்டினால் அவர்களை வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும். காய்கறிகளின் விலைகள் ஏறாமல் தடுக்க குளிர் பதனக்கிடங்குகளை அரசு அமைத்து, காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அரசே விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிகர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
    • ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கோலப் போட்டியில் வென்றவர்களுக்கு ஏ.எம்.விக்கிரமராஜா பரிசு பொருட்கள் வழங்கினார்.

    மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ராஜ்குமார் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன், வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆதி குருசாமி, என்.ஜெயபால், எட்வர்டு, யு.நடராஜன், ஆர்.எம்.பழனியப்பன், ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.
    • நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்சாலைகள், சிறு-குறு தொழில்களுக்காக உச்சபட்ச மின்பயன்பாடு நேர கட்டண உயர்வு ஏற்கனவே காலை 6 முதல் 9 மணி வரை, மாலை 6 முதல் 9 மணி வரை என 6 மணிநேர மின்கட்டண உயர்வு வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 8 மணிநேரமாக உயர்த்தி மறுவரையரை செய்யப்பட்டிருக்கிறது. வரையரை செய்யப்பட்டதோடு அல்லாமல் கட்டண உயர்வும் அமலாக்கத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே, தொழில் துறையினர் தங்களது உற்பத்தியில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தங்களது தயாரிப்புப் பொருட்களின் உற்பத்தியை குறைத்திருப்பதாக தெரியவருகின்றது.

    இதனால் இத்தொழில் சார்ந்த துறையினர் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதோடு, தங்களது தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. எனவே தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப்பேசி, உச்சபட்ச நேர மின்பயன்பாட்டு உயர்வு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, பொதுமக்கள், தொழில்துறையினர், சிறு வியாபாரிகள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். இதேபோல் நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
    • தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்திய மூர்த்தி நகரில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-

    வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.

    கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கின்றோம்.

    இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.

    தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.

    ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்கமாட்டோம்.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அருண் சின்னப்பா, சாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    மே 5 வணிகர் தினத்தையொட்டி வணிகர் சங்கங்கள் நாளை மாநாடுகள் நடத்துகின்றன. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாநாடு நடைபெறுகிறது. பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நடத்தும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, வெள்ளக் கோவில் சாமிநாதன், பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி விருதுகள் வழங்குகிறார்கள்.

    பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாட்டு தீர்மானங்களை பிரகடனபடுத்தி முன் மொழிந்து பேசுகிறார். வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வணிகர்களின் உரிமையை வென்றெடுக்க பேரமைப்பின் கள நிகழ்வினை முன்னிறுத்தும் மாநாடாக இது நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு தொழில் முனைவோர்களும் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய வணிகர் சம்மேளன தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் பாராட்டுரை வழங்குகிறார்கள்.

    மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

    மாநாட்டையொட்டி நாளை (5-ந்தேதி) தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதையொட்டி இன்று (4-ந்தேதி) மாநாட்டு திடலில் சிறு-குறு நிறுவனங்கள் தங்களது நிறுவன பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் (கண் காட்சி) அமைத்துள்ளன. இதை இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைக்கிறார்.

    ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமையில் கோவை மண்டலத் தலைவர் சூலூர் சந்திரசேகரன் வணிக கொடியை ஏற்றி வைக்கிறார். சங்க தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கே.ஜோதிலிங்கம், ஆம்பூர் கிருஷ்ணன் அமல்ராஜ் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்பட பலர் மாநாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

    • முப்பெரும் விழாவில் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.
    • சிறப்பு விருந்தினர்களுக்கு தாய்சீனிஸ் தியேட்டர் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    விக்கிரமசிங்கபுரம் வணிகர் சங்க கொடியேற்று விழா, புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கல்வி பரிசளிப்பு என முப்பெரும் விழா அசிசி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா , நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன், மாநில கூடுதல் செயலாளர் காளிதாஸ், மாவட்ட தலைவர் செல்வராஜ், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜன், வள்ளிமயில் வேம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    விழாவிற்கு வி.கே.புரம் வணிகர்கள் சங்க தலைவர் பீட்டர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

    சேக் அலி, ஜெயகுமார், முருகேசன், பிரபாகரன், தங்கதுரை, ஹரி, மனோகரன், அபுல் கலாம் ஆசாத், சிற்றரசன், மவுதுகனி, அய்யலுசாமி, டேவிட் பெரியசாமி, இசக்கி, அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழா குழு தலைவர் குட்டி கணேசன் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் பொன்ராஜ் தொகுத்து வழங்கினார். வர்த்தக சங்க தீர்மானங்களை ஜவகர், காசிராஜன், செல்லத்துரை ஆகியோர் வாசித்தனர்.

    சிறப்பு விருந்தினராக அம்பை ஒன்றிய தலைவர் பரணி சேகர், விக்கிரம சிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பை ஒன்றிய துணைத் தலைவர் ஞானக்கனி, வி.கே.புரம் நகராட்சி துணைத் தலைவர் திலகா சிற்றரசன், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், அடையகருங்குளம் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி மதன கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் வர்த்தக சங்க தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசுகையில், அகஸ்தியர் அருவிக்கு செல்ல ரூ.30 வசூலிப்பதை தடுக்க அரசிடம் வலியுறுத்துவோம். நெல்லையில் இருந்து பாபநாசம் வர சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என்பார்கள். ஆனால் தற்போது 1½ மணி நேர ஆகிறது. எனவே சாலைப்பணிகளை விரைவாக முடிக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசுவேன் என்றார்.

    விழாவில் அகஸ்தியர் அருவி கட்டணம் ரத்து, நெல்லையில் இருந்து புறப்படும் அந்தியோதியா ரெயிலை அம்பை வழியாக நெல்லை - செங்கோட்டை செல்லும் ரெயிலுடன் இணைக்கும் விதமாக 5.20 அந்தியோதியா ரெயிலை நெல்லையில் இருந்து இயக்க கோருதல் உள்பட சுமார் 11 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு தாய்சீனிஸ் தியேட்டர் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நகர வணிகர்கள் அனைவரும் விழா நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

    • காஞ்சிபுரம் மண்டல-மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை பெரியமேட்டில் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது
    • கூட்டத்தில் வணிக வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘டெஸ்ட் பர்ச்சேஸ்' நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை, காஞ்சிபுரம் மண்டல-மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை பெரியமேட்டில் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்திட கோரியும், இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் 4 கட்ட போராட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகள் முன்பு விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது என்றும், விழிப்புணர்வு 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 2-ம் கட்டமாக 24-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 3-ம் கட்டமாக உண்ணாவிரதமும், 4-ம் கட்டமாக கடையடைப்பு போராட்டமும் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது. உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கான தேதிகள் 24-ந்தேதி அறிவிக்கப்படும் என தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

    ×