

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகிலுடன் சேர்ந்து கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்ட் கலவையை நிரப்பி அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகில் கைது செய்யப்பட்டனர்.
தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் டிரம்மில் கணவனை கொலை செய்து அடைத்து வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் டிரம் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அக்கம் பக்கத்தினரின் கிண்டலுக்கு உள்ளாவோம் என புதிய டிரம் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுவதால், மாதம் 60 டிரம் வரை விற்பனையான நிலையில் தற்போது 15 டிரம் விற்பனையாவதே சவாலாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.