என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் கடை"

    • சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி-சத்தி மெயின் ரோட்டில் பெரியார் திடலில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாலையிலேயே வந்து தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரமாக தேங்காய் வியாபாரி ஒருவர் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் கடையில் இருந்த பொருட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வியாபாரி கோபி ஈரோடு-சத்தி ரோட்டில் தேங்காயை போட்டு உடைத்து போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்த வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிறுவியது. தொடர்ந்து சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.

    • கிழக்கு வடக்கில் விவசாயிகளுக்கும், மேற்கு பகுதியில் கமிஷன் மண்டிகளும், கிழக்கு - தெற்கு பகுதியில் சிறு வியாபாரிகளுக்கும் கடை அமைக்கப்பட்டுள்ளது.
    • உழவர் சந்தைக்கு சென்று வரும் விவசாயிகளுக்கு மழைக்காலங்களில் வியாபாரம் பாதிக்கப்படும்.

    திருப்பூர்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். கிழக்கு வடக்கில் விவசாயிகளுக்கும், மேற்கு பகுதியில் கமிஷன் மண்டிகளும், கிழக்கு - தெற்கு பகுதியில் சிறு வியாபாரிகளுக்கும் கடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் வடக்கு ஓரமாக பாதை விடப்பட்டுள்ள இடத்தில் தேங்காய் கடை அமைக்கிறோம் என்று செட் அமைக்கப்படுகிறது.இந்த செட் அமைப்பதால் உழவர் சந்தைக்கு சென்று வரும் விவசாயிகளுக்கு மழைக்காலங்களில் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே தேங்காய் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்க ஏதுவாக வேலைகள் நடைபெறுவதை முழுமையாக தடுத்து நிறுத்திட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    ×