

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி திருச்செந்தூருக்கு பல்வேறு இடங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதனால் சிறப்பு ரெயில் இயக்க ரெயில்வேத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் 10.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். மறுமார்க்கமாக காலை 11.20 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் ரெயில் 12.55 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.