என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு..!
- காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடத்த நிபுணர் குழு முடிவு.
- மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனு.
திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
அதேவேளையில் அன்றைய தினம் மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில், திருச்செந்தூரை சேர்ந்த சிவராம சுப்பிரமணியன் என்பவர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கோவில் நிபுணர்குழு முடிவு செய்த நேரத்தில் குடமுழுக்கு நடத்தலாம். வரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும்போது கோவில் விதாயகரிட் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற உத்தரவிட்டுள்ளனர்.
Next Story






