search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவர்-வாலிபருக்கு கத்திகுத்து; 7 பேர் கைது
    X

    டிரைவர்-வாலிபருக்கு கத்திகுத்து; 7 பேர் கைது

    • மதுரை அருகே டிரைவர்-வாலிபருக்கு கத்திகுத்து விழுந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் இந்திரா நகர் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் சுகுமாரன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று நேதாஜி தெருவில் ஒரு பெட்டிக்கடை முன்பாக தனது ஆட்டோவை நிறுத்தினார்.

    அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நவநீதன் மகன் சதீஷ்குமார் (24), ஜெயஹிந்த்புரம் என்.எஸ்.கே தெரு மாரிமுத்து மகன் மணிகண்டன் என்ற எம்டன் மணி (25), நேதாஜி தெரு பாண்டி மகன் பாலமுருகன் (19) மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் சுகுமாரனை வேறொரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சிறுவன் உள்பட 4 பேரும் சுகுமாரனை ஆபாசமாக பேசி கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், மணிகண்டன், பாலமுருகன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    ஆரப்பாளையம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் நவீன் பாண்டி (21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விக்கி (20),வீரபிரபு (20), சரண்குமார் (20) ஆகிய 4 பேர் மேலப்பொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி (54) மகனை மது குடிக்க அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

    இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நவீன்பாண்டி உள்பட 4 பேரும் வளர்மதியின் மகனை கேலி கிண்டல் செய்து கத்தியால் குத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து வளர்மதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் பாண்டி , விக்கி, வீரபிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×