search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 people arrested"

    • காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கோவை,

    கோவை மாநகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க கூடாது எனவும் போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், நேற்று கோவை கடைவீதி அருகே காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடைவீதி போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த வேலாண்டி பாளையத்தை சேர்ந்த கணேஷ் பாபு (வயது24), பீளமேடு ஆவாரம் பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சரவணன் (31), இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார் (21), திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 போதை மாத்திரைகள், 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல், பீளமேடு ஆவாரம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே போதை மாத்திரை விற்பனை செய்த ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சுஜித் (25), ஜெகநாதபுரத்தை சேர்ந்த சிவசூரியன் (23) மற்றும் புலியகுளம் மருதாச்சலம் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    • கும்பலாக வந்த ஒரு தரப்பினர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி னர்.
    • மேல்மங்கலத்தில் பதட்ட மான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேல்மங்க லத்தை சேர்ந்தவர் வெற்றி வேல். இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனைத் தொடர்ந்து அவர் வடுகபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து வந்த வாலிபர்களிடம் விசாரித்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு கும்பலாக வந்த ஒரு தரப்பினர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி னர். இந்த தாக்கு தலில்ஜெகதீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    ஜெகதீஸ்வரன் தேனி அரசு ஆஸ்பத்திரியிலும், முத்துக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

    இதில் 5 பேர் திருச்சியை சேர்ந்த ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதனால் மேல்மங்கலத்தில் பதட்ட மான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    • கோவை மாநகரில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • போலீசார் அந்த வாலி பர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    கோவை,

    கோவையில் அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடந்தது. இதனையடுத்து கோவை மாநகரில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு ரெயில் நிலையம் அருகே துப்பாக்கியுடன் சுற்றிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 7 பேர் ஆயுதங்களுடன் சிக்கினர்.

    செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் செல்வ சிந்தாமணிகுளம் வழியாக ரோந்து சென்றனர்.அப்போது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து போலீசார் அந்த வாலி பர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் 3 கத்திகளை தங்களது உடலில் மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் பிடிபட்ட 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செல்வபுரம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த கனகராஜ் (வயது 32), சொக்கம்புதூரை சேர்ந்த பிரதாப் (23), தேவேந்திரா வீதியை சேர்ந்த இந்திரகுமார் (26) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் மீது ஏற்கனவே செல்வபுரம் போலீசில் நிலையத்தில் கொலை மிரட்டல், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 3 பேரிடம் போலீசார் கத்தியுடன் சுற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வழிப்பறியில் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கத்தியுடன் சுற்றியதாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சரவணம்பட்டி அருகே சாரதா சிட்டியில் உள்ள பெட்டிக்கடை முன்பு வாள், அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கீரநத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிப்பது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். இதனை கேட்டு பெட்டிக்கடைக்காரர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்த 4 வாலிபர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள், ஒரு வாள், ஒரு அரிவாள், 2 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கணபதியை காமராஜபுரத்தை சேர்ந்த கவுரிசங்கர் (24), சுகந்தராம் (23), சரவ ணம்பட்டி விநாயகா புரத்தை சேர்ந்த ரித்திக் (19), ஜெகதீஸ் (30) என்பது தெரிய வந்தது. போலீசார் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    • போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள மரப்பாலம் ராஜேஸ்வரி நகரில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 23), சுண்டக்காமுத்தூரை சேர்ந்த பூவேந்தன் (22) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ேபாலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய ஆரோன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சரவணம்பட்டி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அழகு செல்வி தலைமையில் காளப்பட்டி ரோடு மகா நகர் மைதானம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கணபதியை சேர்ந்த ஜெயக்குமார் (25), மணியக்கார ன்பாளையதத்தை சேர்ந்த முகேஷ் கண்ணா (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 7 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதேபோல சரவணம்பட்டி அஞ்சுகம் நகரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னவேடம்பட்டியை சேர்ந்த மாரி என்ற மனோஜ் (22), விமல் (24), முரளி (30) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கவுதம் என்பவரை தேடி வருகிறார்கள். 

    • நேற்று இரவு ஜீவா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
    • கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தென்னம்பாக்கம் சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கும் கலையூர் சேர்ந்த ஜீவா என்பவருக்கும் கடந்த 15 -ந் தேதி பெட்ரோல் போடும்போது வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு ஜீவா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது சேதுபதி அங்கு இல்லாததால் அவரது அண்ணன் பூபாலன், இவரது மனைவி பவித்ரா ஆகியோரை சரமாரியாக தாக்கினார்கள். மேலும் பவித்ராவை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது . மேலும் பூபாலன் மீது பெட்ரோலை ஊற்றி கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

    இதில் காயம் அடைந்த பூபாலன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பூபாலன் தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கலையூர் சேர்ந்த ஜீவா (வயது23), தூக்கணாம்பாக்கம் சேர்ந்த கணபதி 22, செல்லஞ்சேரி சேர்ந்த ரகு (22), கலையூர் சேர்ந்த சதீஷ்குமார் (26), புதுவை கல்மண்டபம் சேர்ந்த தினகரன் (24), புதுவை ஏம்பலம் சேர்ந்த யுவராஜ் (21), கலையூர் சேர்ந்த சூர்யா (21) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
    • கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அரவேணு பகுதியில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அரவேனு ஜீப் ஸ்டேண்டு அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவர் வாட்டர்பால்ஸ் பகுதியை சேர்ந்த செல்வா(22)என்பதும், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தேவாலா இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் நாடுகாணியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் கீழ்நாடுகாணியை சேர்ந்த கலைவாணன், தேவலா வாழவயல் மணிராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    கூடலூர் போலீசார் கூடலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஆஸ்பத்திரி பின்புறம் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் கூடலூர் கோத்தர் வயலை சேர்ந்த நிஷான் என்பதும் கஞ்சா விற்க அங்கு நின்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 20 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கூடலூர் பழைய கல்குவாரியில் போதைபொருளுடன் நின்ற பாடந்துரையை சேர்ந்த சத்யா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் நிலாக்கோட்டையில் ஷாஜகான் என்ற வாலிபரும், ஊட்டியில் சீனிவாசன் என்பவரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் நீலகிரியில் 7 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • மதுரை அருகே டிரைவர்-வாலிபருக்கு கத்திகுத்து விழுந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் இந்திரா நகர் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் சுகுமாரன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று நேதாஜி தெருவில் ஒரு பெட்டிக்கடை முன்பாக தனது ஆட்டோவை நிறுத்தினார்.

    அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நவநீதன் மகன் சதீஷ்குமார் (24), ஜெயஹிந்த்புரம் என்.எஸ்.கே தெரு மாரிமுத்து மகன் மணிகண்டன் என்ற எம்டன் மணி (25), நேதாஜி தெரு பாண்டி மகன் பாலமுருகன் (19) மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் சுகுமாரனை வேறொரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சிறுவன் உள்பட 4 பேரும் சுகுமாரனை ஆபாசமாக பேசி கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், மணிகண்டன், பாலமுருகன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    ஆரப்பாளையம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் நவீன் பாண்டி (21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விக்கி (20),வீரபிரபு (20), சரண்குமார் (20) ஆகிய 4 பேர் மேலப்பொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி (54) மகனை மது குடிக்க அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

    இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நவீன்பாண்டி உள்பட 4 பேரும் வளர்மதியின் மகனை கேலி கிண்டல் செய்து கத்தியால் குத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து வளர்மதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் பாண்டி , விக்கி, வீரபிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • 40 வாகனங்கள் மீட்பு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் பஜார் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் பைக்குகள் திருடு போனது. இது குறித்து புகாரின் பேரில் போலீசார் கும்பலை தேடி வந்தனர்.

    ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட பைக் திருடப்படும் சம்பவங்களும் நடந்தன. இதனை தொடர்ந்து கும்பலை பிடிக்க சித்தூர் நகர மற்றும் கிராமப்புற போலீசார் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் தமிழக எல்லை மற்றும் திருப்பதி பெங்களூர் செல்லும் சாலைகளில் அதிரடியாக வாகன சோதனை நடத்தினர்.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.சி.ஆர் கிராஸில் நேற்று, வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ​3 மோட்டார் சைக்கிள்களில், வந்த 7 பேர் தமிழகத்தை நோக்கி நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றனர்.போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் தமிழகத்தின் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சதீஷ், ராஜீவ் காந்தி, கோகுல கண்ணன், யுவராஜ், ஹரி, ஆகாஷ் மற்றும் பாலா என தெரியவந்தது.அனைவரும் 20-22 வயதுக்கு உட்பட்டவர்கள்.

    விசாரணையில் அவர்கள் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பைக் திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 40 பைக் பறிமுதல் செய்தனர். போலீசார் 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்கு தீ வைத்ததாக சிறை வார்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • இவ்வழக்கை விசாரித்தவர் கடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் கடந்த மாதம் 28 - ந்தேதி மர்ம கும்பல் தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வீட்டிற்கு தீ வைத்ததாக சிறை வார்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரனிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மூன்று நாட்கள் போலீஸ் காவல் கேட்டு கடலூர் முதுநகர் போலீசார் கடலூர் நீதி மன்றத்தில் மனு அளித்தனர். இதற்காக மத்திய சிறையில் இருந்து கைதி பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் இவ்வழக்கை விசாரித்த கடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா, எண்ணூர் தனசேகரனை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    ×