என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சித்தூர் மாவட்டத்தில் பைக் திருடிய வேலூர், ராணிப்பேட்டையை சேர்ந்த 7 பேர் கைது
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் பஜார் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் பைக்குகள் திருடு போனது. இது குறித்து புகாரின் பேரில் போலீசார் கும்பலை தேடி வந்தனர்.
ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட பைக் திருடப்படும் சம்பவங்களும் நடந்தன. இதனை தொடர்ந்து கும்பலை பிடிக்க சித்தூர் நகர மற்றும் கிராமப்புற போலீசார் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் தமிழக எல்லை மற்றும் திருப்பதி பெங்களூர் செல்லும் சாலைகளில் அதிரடியாக வாகன சோதனை நடத்தினர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.சி.ஆர் கிராஸில் நேற்று, வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 3 மோட்டார் சைக்கிள்களில், வந்த 7 பேர் தமிழகத்தை நோக்கி நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றனர்.போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் தமிழகத்தின் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சதீஷ், ராஜீவ் காந்தி, கோகுல கண்ணன், யுவராஜ், ஹரி, ஆகாஷ் மற்றும் பாலா என தெரியவந்தது.அனைவரும் 20-22 வயதுக்கு உட்பட்டவர்கள்.
விசாரணையில் அவர்கள் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பைக் திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 40 பைக் பறிமுதல் செய்தனர். போலீசார் 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்