என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன்  மீது 126 டிரோன்கள், ஏவுகணையை ஏவி ரஷியா தாக்குதல் - 4 பேர் பலி
    X

    உக்ரைன் மீது 126 டிரோன்கள், ஏவுகணையை ஏவி ரஷியா தாக்குதல் - 4 பேர் பலி

    • குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
    • மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவியது.

    ரஷியா, இன்று (பிப்ரவரி 23) உக்ரைன் மீது 126 டிரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியது.

    உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை 105 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியது. இருப்பினும், 20 ட்ரோன்களும் ஏவுகணையும் 11 இடங்களில் தாக்கின. இதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்தனர்.

    ஒடெசா, ஜபோரிஜியா, கெர்சன்,டொனெட்ஸ்க், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், கார்கிவ், சுமி ஆகிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    முன்னதாக நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவியது. ஆனால் அவை இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

    இதனால் மாஸ்கோவில் தாற்காலிகமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு பின் செயல்பாட்டுக்கு வந்தன.

    முந்தைய நாள் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில் உக்ரைன் இந்த தாக்குதலை பதிலடியாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×