என் மலர்tooltip icon

    உலகம்

    479 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா..!
    X

    479 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா..!

    • நேற்றி இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தாக்குதல்.
    • பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல்.

    ரஷியா நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் டிரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

    479 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

    இரவு நேரங்களில் டிரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை டிரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    ஷாஹேத் வகை டிரோன்கள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்திய வருகிறது. கடந்த 3 வருடத்திற்கு மேலாக ரஷியா நடத்திய தாக்குதலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் ரஷியா விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட ரஷிய விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ரஷியா தாக்குதலை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே ரஷியா- உக்ரைன் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஆயிரக்கணக்கான கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

    Next Story
    ×