என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிடப் போவதில்லை: அமெரிக்க துணை அதிபர்
    X

    இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிடப் போவதில்லை: அமெரிக்க துணை அதிபர்

    • ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
    • இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் நிலைகுலைந்து காணப்பட்டது.

    வாஷிங்டன்:

    பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் நாங்கள் தற்போது தலையிடப் போவதில்லை.

    பதற்றத்தைத் தணிப்பதற்கு முயற்சி செய்வோம்.

    இரு நாடுகளையும் ஆயுதங்களைக் கைவிடும்படி நாங்கள் கூறமுடியாது.

    இது மிகப் பெரிய போராகவோ, அணு ஆயுத பிரச்சனையாகவோ மாறாது என நம்புகிறோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×