என் மலர்
நீங்கள் தேடியது "UNRWA"
- 2025 தொடக்கத்தில் UNRWA-வின் செயல்பாடுகள் இஸ்ரேலிய நிலப்பரப்பில் தடை செய்யப்பட்டன.
- 37 உதவி அமைப்புகளின் செயல்பாட்டு உரிமங்களை (Operating Licences) இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமையின் தலைமையகத்தை இஸ்ரேல் இடிக்கத் தொடங்கியுள்ளது. காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குழுக்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (UNRWA), தனது ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்களை இஸ்ரேலிய ராணுவம் பிடுங்கிக் கொண்டதாகவும், அலுவலகத்தை விட்டு அவர்களை வெளியேற்றியதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதானது மட்டுமல்லாமல், சர்வதேச விதிகளை மீறும் செயல் என்றும், ஐநா சபையின் சலுகைகள் மற்றும் அதன் பாதுகாப்பிற்கு எதிரான ஒரு தீவிரமான விதிமீறல் எனவும் முகமை தெரிவித்துள்ளது. புல்டோசர்களுடன் வந்த இஸ்ரேலிய இராணுவக் குழு ஒன்று, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தெருக்களை மூடிவிட்டு, இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்திய பிறகு ஐநா முகமையின் வளாகத்திற்குள் புகுந்ததாகவும், அங்குள்ள கட்டடங்களை இடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி UNRWA அமைப்பை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. ஆதாரங்கள் எதையும் வழங்காமலேயே, அந்த அமைப்புக்கு ஹமாஸுடன் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனை அந்த ஐநா முகமை வன்மையாக மறுத்துள்ளது.
இதனிடையே அந்த அமைப்பிற்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைப் பின்பற்றியே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 அக்டோபரில் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2025 தொடக்கத்தில் UNRWA-வின் செயல்பாடுகள் இஸ்ரேலிய நிலப்பரப்பில் தடை செய்யப்பட்டன.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவீர், தான் அந்தப் பணிக் குழுக்களுடன் தலைமையகத்திற்குச் சென்றதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் இதனை ஒரு 'வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை தாண்டியும் உதவிசெய்த 37 உதவி அமைப்புகளின் செயல்பாட்டு உரிமங்களை (Operating Licences) இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.
- ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது
- உலகம் கண்டிராத ஒரு மனித குல பேரழிவு நடப்பதாக அந்த முகமை தெரிவித்தது
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை முற்றிலுமாக தடுத்து விட்டது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒரு வழித்தடம் அமைத்து தரவேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட பல மனிதாபிமான அமைப்புகள் இஸ்ரேலிடம் வைத்த கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது.
வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தொடங்க இருப்பதாகவும், அதனால் காசா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கெடு விதித்திருந்தது. இஸ்ரேல் விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேற தொடங்கி விட்டனர்.
இதற்கிடையே, கிழக்கு ஜெருசேலம் பகுதியில் ஐ.நா. கூட்டமைப்பின் நிவாரண பணி முகமை (UN Relief And Works Agency) அமைப்பின் தலைவர் பிலிப் லசாரினி (Philippe Lazzarini) காசா பொதுமக்களின் துயரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
உலகம் மனிதாபிமானத்தை இழந்து விட்டது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் எந்த மனிதாபிமான உதவிகளையும் காசா மக்களுக்கு வழங்க முடியவில்லை. காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்தான் 'உயிர்' - ஆனால் காசாவில் குடிநீர் இல்லை; ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லை. காசாவின் 'உயிர்' பிரிந்து கொண்டிருக்கிறது. விரைவில் உணவு மற்றும் மருந்து ஆகியவையும் கிடைப்பது நின்று விடும். கடந்த 8 நாட்களாக காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை. அங்கு இதுவரை உலகம் கண்டிராத ஒரு மனிதகுல பேரழிவு நடந்து வருகிறது. பாதுகாப்பான இடம் என அங்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று (அக்டோபர் 16) உலகம் முழுவதும் "உலக உணவு தினம்" கொண்டாடப்படும் வேளையில், லட்சக்கணக்கான காசா மக்களுக்கு உணவு, வசிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது கவலை தரும் நிகழ்வு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






