search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UNO"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2023 வருடத்திற்கான தீம், "நீரே உயிர்; நீரே உணவு." என்பதாகும்
    • அதீத உணவால் உடலாரோக்கிய குறைபாடுகளுடன் சிலர் இருக்கிறார்கள்

    ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு (Food And Agricultural Organization) தொடங்கபட்ட அக்டோபர் 16, ஒவ்வொரு வருடமும் "உலக உணவு தினம்" (World Food Day) என இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    உலக மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைப்பதில் உள்ள தடைகளை கண்டறிந்து, அவற்றை நீக்குவதற்கான சரியான வழிமுறைகளை கடைபிடிக்க உலக நாடுகளை வலியுறுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நிலையான விவசாயம், உணவு வீணடித்தல் தடுப்பு, சத்தான உணவு கிடைக்க செய்தல், மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை இந்த வழிமுறைகளின் முக்கிய அம்சங்கள்.

    1981லிருந்து உலக உணவு தின கொண்டாட்டத்தில், ஒவ்வொரு வருடமும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு "தீம்" வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    2023 வருடத்திற்கான தீம், "நீரே உயிர்; நீரே உணவு. எவரும் விடுபட கூடாது" என்பதாகும்.

    பசியால் தவிப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும், காச நோய், மலேரியா மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களால் இறந்தவர்களை விட பசியால் உயிரிழப்பவர்களே அதிகம் என்றும் 10 பேரில் ஒருவர் எப்போதும் உணவின்றி தவிக்கிறார் என்றும் தெரிவிக்கும் புள்ளி விவரங்கள், அதே வேளையில் உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் அதிக எடையுடையவர்கள் என குறிப்பிடுகிறது.

    பலர் உணவின்றி வாடும் நிலையில், ஒரு சிலர் அதீத உணவால் உடலாரோக்கிய குறைபாடுகளால் தவிப்பது ஒரு பெரும் முரண்பாடாக பார்க்கப்படுகிறது.

    வறுமை, போர், இயற்கை சீற்றம் மற்றும் இயற்கை பேரழிவு உட்பட பல காரணங்களால் உலக மக்களில் பலர் உணவின்றி தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதனை மாற்றும் வகையில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    உலக தமிழர்களின் பண்டைய நூலான திருக்குறள் இச்சிக்கலை தீர்க்க வழி சொல்கிறது.

    "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

    தீப்பிணி தீண்டல் அரிது" - (திருக்குறள் 227)

    பொருள்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை, பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுவது கிடையாது

    • ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது
    • உலகம் கண்டிராத ஒரு மனித குல பேரழிவு நடப்பதாக அந்த முகமை தெரிவித்தது

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை முற்றிலுமாக தடுத்து விட்டது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒரு வழித்தடம் அமைத்து தரவேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட பல மனிதாபிமான அமைப்புகள் இஸ்ரேலிடம் வைத்த கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

    வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தொடங்க இருப்பதாகவும், அதனால் காசா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கெடு விதித்திருந்தது. இஸ்ரேல் விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேற தொடங்கி விட்டனர்.

    இதற்கிடையே, கிழக்கு ஜெருசேலம் பகுதியில் ஐ.நா. கூட்டமைப்பின் நிவாரண பணி முகமை (UN Relief And Works Agency) அமைப்பின் தலைவர் பிலிப் லசாரினி (Philippe Lazzarini) காசா பொதுமக்களின் துயரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உலகம் மனிதாபிமானத்தை இழந்து விட்டது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் எந்த மனிதாபிமான உதவிகளையும் காசா மக்களுக்கு வழங்க முடியவில்லை. காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்தான் 'உயிர்' - ஆனால் காசாவில் குடிநீர் இல்லை; ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லை. காசாவின் 'உயிர்' பிரிந்து கொண்டிருக்கிறது. விரைவில் உணவு மற்றும் மருந்து ஆகியவையும் கிடைப்பது நின்று விடும். கடந்த 8 நாட்களாக காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை. அங்கு இதுவரை உலகம் கண்டிராத ஒரு மனிதகுல பேரழிவு நடந்து வருகிறது. பாதுகாப்பான இடம் என அங்கு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இன்று (அக்டோபர் 16) உலகம் முழுவதும் "உலக உணவு தினம்" கொண்டாடப்படும் வேளையில், லட்சக்கணக்கான காசா மக்களுக்கு உணவு, வசிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது கவலை தரும் நிகழ்வு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தன்னாட்சி கோரி 1960களில் இருந்தே போராட்டங்கள் நடைபெறுகின்றன
    • தாக்குதலில் 11 குழந்தைகளும் உயிரிழந்தனர்; 56 பேர் காயமடைந்தனர்

    கடந்த 2021ல் மியான்மரில் நடைபெற்ற ராணுவ புரட்சியின் விளைவாக அந்நாட்டில் ஆட்சியில் இருந்து வந்த ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கி எறியப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது.

    மியான்மரில் தன்னாட்சி கோரி பல வருடங்களாக போராடி வரும் அமைப்பு, கசின் சுதந்திர குழு (Kachin Independence Organization). இது மியான்மர் (முன்னர் பர்மா) அரசை எதிர்த்து 1960களில் இருந்தே போராடி வருகிறது. போராடங்கள் 2011க்கு பிறகு தீவிரமடைந்துள்ளன.

    இந்நிலையில், வடகிழக்கு மியான்மரில் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள லைசா (Laiza) நகருக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் (Mong Lai Khet) முகாம் பகுதியில் வெடி குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்தது. இத்தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர்; 56 பேர் காயமடந்தனர். காயமடைந்தவர்களில் 44 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என கசின் சுதந்திர குழு அறிவித்துள்ளது. கசின் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுதந்திர குழுவிற்கு அளித்து வரும் ஆதரவை விரும்பாத மியான்மர் ராணுவம் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவதாக இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    "இத்தாக்குதல் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான ஒரு போர் குற்றம்", என முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

    இத்தாக்குதலின் பின்னணியில் ராணுவம் இருப்பதை திட்டவட்டமாக மறுத்த ஆட்சியில் இருக்கும் "ஜன்தா" ராணுவ அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜா மின் டுன் (Zaw Min Tun), "அப்பகுதியில் ராணுவத்தினருக்கு எந்த செயல்பாடும் எப்போதும் இருந்ததில்லை. போராடும் அமைப்பினர் வெடிப்பொருட்களை தேக்கி வைத்ததால் அதில் விபத்து ஏற்பட்டு இது நிகழ்ந்திருக்கலாம்," என தெரிவித்தார்.

    இந்த நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகளின் சபை தனது ஆழ்ந்த கவலையையும், இரங்கலையும் தெரிவித்துள்ளது.

    ×