search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உலக உணவு தினம் - ஒரு இந்திய பார்வை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உலக உணவு தினம் - ஒரு இந்திய பார்வை

    • 2023 வருடத்திற்கான தீம், "நீரே உயிர்; நீரே உணவு." என்பதாகும்
    • அதீத உணவால் உடலாரோக்கிய குறைபாடுகளுடன் சிலர் இருக்கிறார்கள்

    ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு (Food And Agricultural Organization) தொடங்கபட்ட அக்டோபர் 16, ஒவ்வொரு வருடமும் "உலக உணவு தினம்" (World Food Day) என இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    உலக மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைப்பதில் உள்ள தடைகளை கண்டறிந்து, அவற்றை நீக்குவதற்கான சரியான வழிமுறைகளை கடைபிடிக்க உலக நாடுகளை வலியுறுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நிலையான விவசாயம், உணவு வீணடித்தல் தடுப்பு, சத்தான உணவு கிடைக்க செய்தல், மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை இந்த வழிமுறைகளின் முக்கிய அம்சங்கள்.

    1981லிருந்து உலக உணவு தின கொண்டாட்டத்தில், ஒவ்வொரு வருடமும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு "தீம்" வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    2023 வருடத்திற்கான தீம், "நீரே உயிர்; நீரே உணவு. எவரும் விடுபட கூடாது" என்பதாகும்.

    பசியால் தவிப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும், காச நோய், மலேரியா மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களால் இறந்தவர்களை விட பசியால் உயிரிழப்பவர்களே அதிகம் என்றும் 10 பேரில் ஒருவர் எப்போதும் உணவின்றி தவிக்கிறார் என்றும் தெரிவிக்கும் புள்ளி விவரங்கள், அதே வேளையில் உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் அதிக எடையுடையவர்கள் என குறிப்பிடுகிறது.

    பலர் உணவின்றி வாடும் நிலையில், ஒரு சிலர் அதீத உணவால் உடலாரோக்கிய குறைபாடுகளால் தவிப்பது ஒரு பெரும் முரண்பாடாக பார்க்கப்படுகிறது.

    வறுமை, போர், இயற்கை சீற்றம் மற்றும் இயற்கை பேரழிவு உட்பட பல காரணங்களால் உலக மக்களில் பலர் உணவின்றி தவித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதனை மாற்றும் வகையில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    உலக தமிழர்களின் பண்டைய நூலான திருக்குறள் இச்சிக்கலை தீர்க்க வழி சொல்கிறது.

    "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

    தீப்பிணி தீண்டல் அரிது" - (திருக்குறள் 227)

    பொருள்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை, பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுவது கிடையாது

    Next Story
    ×