search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில்த.வா.க நிர்வாகிகள், போலீசார் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை
    X

    விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் த.வா.க நிர்வாகிகள், போலீசார் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

    விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில்த.வா.க நிர்வாகிகள், போலீசார் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை

    • போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்

    கடலூர்:

    விருத்தாசலம் வட்டம் மந்தாரக்குப்பத்தில் கடலூர் -விருத்தாசலம் நெடுஞ்சா லையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவ லகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூ றாக இருப்பதாக கூறி மந்தாரக்குப்பம் போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அரசை கண்டித்து போரா ட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இதனை யடுத்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கும் கட்சியினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

    விருத்தாசலம் சப்-கலெ க்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீத், மந்தாரக்கு ப்பம் காவல் ஆய்வாளர் மலர்விழி, தேசிய நெடுஞ்சா லை இளநிலை பொறியாளர் செந்தமி ழ்ச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முருகன், நகர செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதா கவும், மேலும் அந்த பகுதியில் போக்குவ ரத்து இடையூறாக ஆக்கிரமி த்துள்ள கடைகளையும் அகற்றுமாறு அதிகாரிக ளிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×