என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்புளூயன்சா காய்ச்சல்"

    • உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவுவது அவசியமானது.

    தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்புளூயன்சா என்ற சுவாசம் சார்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ (எச்1என்1, எச்3என்2) மற்றும் இன்புளூயன்சா பி போன்ற குறிப்பிட்ட வகை வைரஸ்கள் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    தமிழ்நாட்டில் பொதுவாக மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் இந்த காய்ச்சல் பரவி நோய் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. தற்போது மழைக்காலம் தொடங்கி பருவ காலம் மாறி இருப்பதால் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.

    இன்புளூயன்சா வைரசின் அறிகுறிகள்:

    * உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சலை உண்டாக்கும்.

    * தொடர்ந்து இருமல் ஏற்படலாம்.

    * உணவுப்பொருளை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். அல்லது தொண்டை வலி உண்டாகும்.

    * உடல் சோர்வுடன் காணப்படும்.

    * உடல் முழுவதும் வலி உண்டாகும். குறிப்பாக தசைகள் மற்றும் தலையில் அதிக வலியை உணரலாம்.

    * காய்ச்சல் இருந்தாலும் உடல் குளிர்வது போன்ற உணர்வும் ஏற்படும்.

    * சளி ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு ஏற்படக்கூடும்.

    * தலைவலி உண்டாகும்.

    சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.

    மருத்துவ ஆலோசனை

    * இந்த அறிகுறிகள் கடுமையாக இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

    * வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவக்கூடும். அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

    சிகிச்சை முறை

    * குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ண முடியாத நிலை இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

    * மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

    தடுப்புமுறை

    * உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தண்ணீரும் அதிகம் பருக வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.

    * இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவுவது அவசியமானது. வெளி இடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், சாப்பிடுவதற்கு முன்பும் கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும். சோப்பு அல்லது கிருமிகளை நீக்கும் 'ஹேண்ட் வாஷ்' பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது நல்லது.

    * லேசான காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் 7 நாட்கள் வரை வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க அது உதவும்.

    • இன்புளூயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.
    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம்.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புளூ வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.

    இதைத்தவிர, நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம், டாக்டர்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை.


    ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளையில், தீவிர பாதிப்பு உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சனைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத் துறையினா், சுகாதார களப் பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக் கவசங்களை அணியலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2 மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது பெரிதாக இல்லை.
    • டெங்கு பாதிப்பை பொறுத்தவரை 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிவது அவசியம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஏறத்தாழ 1¼ லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. அதேபோல் காய்ச்சலுக்கு என ஒவ்வொரு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் (எச்1 என்1 வைரஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 465 ஆகும்.

    இதில் 5 வயதுக்கு உட்பட்ட 81 குழந்தைகளும், 5-14 வயதுக்கு உட்பட்டவர்களில் 62 பேரும், 15-65 வயதுக்கு உள்ளானவர்கள் 223 பேரும், 65 வயதுக்கு மேற்பட்டோர்களில் 99 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 10 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 269 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 186 பேர் தங்களது வீடுகளிலும் தனிமைபடுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தலைவலி, உடல்வலி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இந்த வைரசின் தாக்கம் பாதிப்பை உண்டாக்குகிறது. அவர்கள் தங்களை தனிமைக்படுத்தி கொண்டாலே அது போதும். அதற்கு முன்பு டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிவது அவசியம்.

    ஐரோப்பிய நாடுகளில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு என தனி தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதேபோல் உலகில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவிற்கு என 5-வது தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கின்றனர். கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் 4 ஆயிரத்து 193 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 10 லட்சத்து 89 ஆயிரத்து 529 பேர் பயன் அடைந்திருக்கின்றனர்.

    கடந்த 2 மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது பெரிதாக இல்லை. நாளொன்றுக்கு 400-ல் இருந்து 500-க்குள்தான் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனால் பதற்றமடைய தேவையில்லை. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×