என் மலர்
நீங்கள் தேடியது "நடிகை ராதிகா"
- தனித்துவமான நடிப்பு திறன் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் ராதிகா.
- கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராதிகா அனுமதி.
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ராதிகா. நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முக அடையாளங்கள் கொண்டவர் ராதிகா. தனது தனித்துவமான நடிப்பு திறன் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடிகை ராதிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் "டெங்கு" காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராதிகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- நடிகர் சங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு நடிகை ராதிகா பதிலளித்தார்.
- பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவாக கருத்து கூறினால் நன்றாக இருக்கும்.
தமிழ் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று வடபழனியில் நடைப்பெற்றது. அதில் நடிகர் சங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு நடிகை ராதிகா பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது " தயாரிப்பாளர்கள் ஹீரோக்களுக்கு நிறைய சம்பளத்தை கொடுக்கின்றனர். ஆங்கில திரையுலகில் பிளான் செய்கிற விஷயங்களில் 10 பர்சண்ட் இங்கு செய்தால் நம்மளால் பல பணங்களை நாம் சேமிக்க முடியும்.
பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவாக கருத்து கூறினால் நன்றாக இருக்கும். கேரவன் விவகாரம் குறித்து விளக்கம் தான் கூறினேன், புகார் ஏதும் அளிக்கவில்லை. நான் புகார் அளித்திருந்தால் தான், என்னிடம் விசாரணை நடத்துவார்கள்.
இதுபோன்ற ஒரு சமயத்தில் பெரிய பிரச்சினை வந்தபோது நடிகை ஒருவரை காப்பாற்றினேன். 4 நாட்களுக்கு முன்பு எனக்கு எஸ்.ஐ.டியில் இருந்து தொடர்பு கொண்டார்கள்.
படித்த இளைஞர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள், அதனால் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.
என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினைகள் வந்தாலும் நான் தனியாகதான் எதிர்கொண்டுள்ளேன். இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறேன்.
80களில் இருந்து நான் பார்க்கிறேன், எனக்கு தெரியும் தமிழ் திரையுலகிலும் இருக்கிறது. ஆனால், யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பெரிய ஆட்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்கத்தில் ஒரு வலிமையான சங்கம் அமைக்க நான் வலியுறுத்தி உள்ளேன். முன்னணி நடிகர்களின் மவுனம் தவறாக தான் தெரியும்" என்றார்.






