search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prevention Work"

    • 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.

    நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் மழை நீர் தேங்கிய நிலையில் நெல்லை, மேலப்பாளையம், தாழையூத்து ஆகிய மண்டலங்களில் மழைநீர் முழுவதும் வடிந்துள்ளது.

    ஆனால் பாளை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது.

    குறிப்பாக பாளை மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மாநகர பகுதி முழுவதும் சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ ராவ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இன்று வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கொசு மருத்து தெளிக்கப்பட்டது. மேலும் பாளை பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெறுகிறது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் டெங்கு தடுப்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் டெங்கு அறிகுறி காணப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டு அங்கு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    • ஹாட்ஸ்பாட்டாக தேர்வு செய்து கூடுதல் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போதைக்கு தொற்று கட்டுக்குள் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு நேரு வீதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கடந்த மாதம் 22ந் தேதி உடல் நலம் பாதிப்பால் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.பரிசோ தனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட து. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி இறந்தார்.இதையடுத்து மாநகராட்சி சார்பில், மூதாட்டி குடி யிருந்த பகுதியில் முதல் மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வை யில், ஆய்வா ளர் கோகுல்நா தன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டனர். வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ப்பட்டது.யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என கேட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டது. பொது மக்களிடம் கூட்டமாக உள்ள பகுதியில் செல்லும் போது, முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவு ங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்று பர வலை தடுக்கும் வகை யில், ஹாட் ஸ்பாட் பகுதி களை கண்டறிந்து தடுப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள சுகாதார த்துறை தீவிரம் காட்டுகிறது.கடந்த 7மாத ங்களில் இல்லாத வகையில் நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்புளூ யன்சா, சுவாச பிரச்னை ஏற்படக்கூடிய பிற நோய் தொற்று, இதற்கு முன் மற்ற காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவிய இடங்க ளை கண்டறிந்து அப்பகுதி களை ஹாட்ஸ்பா ட்டாக தேர்வு செய்து கூடுதல் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிட ப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்து றை அலுவலர்கள் கூறுகை யில், தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டு, இறப்பை தழுவினால், அதற்கான காரணம் என்ன, இணை நோயா, எப்படி தொற்று வந்தது என்பது குறித்து ஆராயப்படுகிறது. தற்போதைக்கு தொற்று கட்டுக்குள் உள்ளது. கடந்த கொரோனா அலையின் போது ஒன்றுக்கும் மேற்ப ட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட பகுதி ஹாட் ஸ்பாட்டாக கருதி, கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்த ப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்ப டுகிறது என்றனர்.

    • டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சீதோஷண நிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மட்டுமல்லாது பாவூர்சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

    ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியாக வெள்ளையனுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படும் ஏராளமான சிறுவர்கள்-சிறுமியர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நகரங்களை விட கிராமங்களில் அதிக அளவு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறியமுடியாமல் சுகாதாரத்துறையினர் தவிக்கின்றனர்.

    இதுதொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட உடையாம்புளி, ஓடைமறிச்சான், மருதம்புத்தூர், மாறாந்தை, நாலாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. இதையடுத்து காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அனைத்து யூனியன்களின் வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமித்துள்ளோம்.

    ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது அந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. சமீபத்தில் 2 சிறுமிகள் உயிரிழந்தது மூளை காய்ச்சலால் தான். நேற்று கடையம் பகுதியில் இறந்த 8 மாத சிறுவன் சமீபத்தில் 4 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவந்துள்ளான். அதன்பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.

    பெரும்பாலும் டெங்குவில் இருந்து மீள ஒவ்வொருவரின் உடலிலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலும் இருந்தால் போதுமானது. பொதுமக்கள் தங்களது பகுதியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை நாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
    • கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் முரளி சங்கர் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள அரியப்பபுரம் வெள்ளை பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

    கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று நல்ல தண்ணீரில் கொசுப்புழு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். கிராமம் முழுவதும் காய்ச்சல் நோயாளிகள் உள்ளார்களா என கணக்கெடுக்கப்பட்டது. கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், டாக்டர் பாரதி கண்ணம்மா மாவட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் தண்டாயுதபாணி, மாவட்ட மலேரியா அலுவலர் குருநாதன், இளநிலை பூச்சிகள் வல்லுநர் பாலாஜி, வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் ஸ்ரீமுக நாதன், சுகாதார ஆய்வாளர் ஜெயராமன், சுப்ரமணியன் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×