என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dawood ibrahim partner"

    • கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
    • துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருட்கள் தயாரித்து சட்டவிரோதமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்த போதைப்பொருள் கடத்தலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் சிலரும் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை குர்லா பகுதியில் பர்வீன் ஷேக் என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாயை தளமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச போதைக்கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்தது அம்பலமானது.

    இந்த கும்பலை பிடிக்க மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இதில் துபாயை சேர்ந்த முகமது சலீம் ஷேக் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ. 256 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது சலீம் ஷேக் தாவூத் இப்ராகிம் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலாவின் வலது கரமாக செயல்பட்டவர்.

    சலீம் டோலா துபாயில் இருந்து கொண்டு சர்வதேச அளவில் போதைப்பொருட்கள் தயாரித்து வினியோகம் செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இது வரை ஒரு பெண் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    லண்டனில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி இன்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரானான். #DawoodIbrahim
    லண்டன்:

    1993-ம் ஆண்டில் முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

    துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நம்பப்படும் தாவூத் இப்ராஹிம் அங்கிருந்தவாறு கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களை செய்து வருகிறான்.

    மேலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிகளை செய்து ஆதரித்து வருகிறான். நிழல் உலக வாழ்க்கையான தாதா தொழிலில் இன்றும் கொடிகட்டி பறந்து வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறான்.
     
    இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோட்டிவாலா என்பவனை லண்டன் நகரில் உள்ள ஹில்டன் ஓட்டலில் கடந்த 19-ம் தேதி நியூ ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பாகிஸ்தான் நாட்டை பூர்விகமாக கொண்ட ஜபிர் மோட்டிவாலா பத்தாண்டு காலத்துக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் தங்கி வந்துள்ளான்.


    தாவூத் இப்ராகிம் மட்டுமின்றி அவனது மனைவி மஹ்ஜபீன், மகன் மொயீன் நவாஸ், மகள்கள் மஹ்ரூக், மெஹ்ரீன், மாஸியா, மருமகன்கள் ஜுனைத், அவுரங்கசிப்  ஆகியோரின் வரவு-செலவு விவகாரங்களையும் ஜபிர் மோட்டிவாலா தான் கையாண்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவனிடம்  போலீசார் நடத்தும் விசாரணையில் தாவூத் இப்ராகிமின் மொத்த சொத்துகள், முதலீடுகள் தொடர்பான விபரங்கள் மட்டுமின்றி இதர கூட்டாளிகள் பற்றிய ரகசியங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விசாரணை காலம் முடிந்து, சிறையில் இருந்தவாறு ஜபிர் மோட்டிவாலாவை போலீசார் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இன்றைய விசாரணையின்போது தனது பெயரை ஜபிர் சசிக் என்று மோட்டிவாலா தெரிவித்ததாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஜபிர் மோட்டிவாலா சார்பில் இன்று ஜாமின் மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. அவன் மீதான வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டன. #DawoodIbrahim #JabirMoti #WestminsterCourt 
    ×