என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தப்படும்
    X

    ஆலோசனை கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசினார்.

    ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தப்படும்

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
    • வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஓ.பி.எஸ். அணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூலித்தேவன் நினைவு நாள், மூக்கையா நினைவு நாள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ஓ.பி.எஸ். தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 40 பேரை நிறுத்தி வெற்றி பெறுவோம். இதுதான் ஓ.பி.எஸ். நிலைப்பாடு. வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். பயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடி மேலக்கோட்டையை கடந்து தான் அமைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற போராட்டம் நடத்துபவர்கள் யாரும் இல்லை. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சுங்கச்சாவடியை அகற்றா விட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி, நகரச் செயலாளர் ராஜா மணி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் கருத்தராஜ், நகர துணை செயலாளர் விஜய் பாண்டி, முன்னாள் கவுன்சிலர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×