search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Customs Officers"

    • சுங்கத்துறை அதிகாரிகள் அதிநவீன ஸ்கேனிங் எந்திரம் மூலம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்கிறார்கள்.
    • விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.

    வேலை நிமித்தமாகவும், சுற்றுலாவாகவும் வெளிநாடுகளுக்கு செல்வோர் திரும்பி வரும்போது, தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வாறு கடத்தப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்துள்ளது.

    இருந்தபோதிலும் இதனை கட்டுப்படுத்தும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிநவீன ஸ்கேனிங் எந்திரம் மூலம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்கிறார்கள்.

    இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். அப்போது ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் எந்திரத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அந்த எந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து எடுத்து வந்த ரூ.9.64 லட்சம் மதிப்பிலான 159 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport #CBIRaid
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த புகார்களை அடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விமானத்தில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தியது.

    இதில் தங்க கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பது தெரிய வந்தது. தங்கம் கடத்தி வருபவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு கடத்தலுக்கு உதவி உள்ளனர்.

    சோதனையில் அதிகாரிகள் வாங்கிய லஞ்சப் பணம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் என 19 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    கடந்த 7 மாதங்களில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 47 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பே ரூ.14 கோடி என்றால் கடந்த 7 மாதத்தில் பல நூறு கோடி ரூபாய் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வெளிநாட்டு மது, சிகரெட் ஆகியவை சுங்க இலாகா அதிகாரிகள் உதவியோடு கடத்தி வரப்பட்டிருக்கும் என சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர்.

    இதன் மூலம் பல வருடங்களாக சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் குருவிகள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை லஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். மொத்தமாக பணத்தை சேர்த்து பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் தகுதிக்கேற்ப சதவீதம் அடிப்படையில் பிரித்துக்கொள்வார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.9 லட்சம் லஞ்சப் பணம் சுங்க இலாகா அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

    நேற்று கைது செய்யப்பட்ட அதிகாரிகள், கடத்தல் பயணிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடத்தல் தொழில் மூலம் கோடிக்கணக்கில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணையின் முடிவில் சுங்க இலாகா துறை உயர் அதிகாரிகள் சிலரும் விமான நிலைய ஊழியர்கள் சிலரும் சிக்க உள்ளனர் என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TrichyAirport #CBIRaid

    ×