என் மலர்

    நீங்கள் தேடியது "officer suspended"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.
    • 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஷீலா மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அழகுநிலையம் நடத்தி வருபவர் ஷீலா. இவர் போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஷீலா 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் சதீசன், போலி போதைப் பொருள் வழக்கில் ஷீலாவை சிக்க வைத்திருப்பது, சுங்க இலாகா கமிஷனரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீசன், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஷீலா, தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டியும், பொய் புகார் கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையால், தான் கடன் வாங்கி தொடங்கிய அழகு நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்கள் சாலை மறியல்
    • வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த சென்னகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் சங்கர். இவர் மீது பட்டா மாற்றம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் புகார்கள் வழங்கப்பட்டது. இந்த முறைகேடுகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தையும் நடத்தினர்.

    இதற்கிடையில் சங்கர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடியாத்தத்திற்கு இட மாறுதல் செய்யப்பட்டார். குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் விசாரணை செய்து கிராம நிர்வாக அலுவலர் சங்கரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்போனில் சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் லோகநாதனை அதிரடியாக சஸ்பெண் செய்த உத்தரவிட்டார்.

    வேலூர்:

    பெண் ஊழியரிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த செய்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில்துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் என்பவர் நீண்ட நாட்களாக செல்போனில் சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரமும் அவரது தொல்லை அதிகரித்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பெண் ஊழியர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி விசாரணை மேற்கொண்டார்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதனை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்கும் அதிகாரிகள், சகஅலுவலர்கள் மீது புகார்கள் வந்தவுடன் உரிய நடவடிக்கைகள் உட னே எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் போதையில் சென்று சீண்டலில் ஈடுபட்ட பி.டி.ஓ. கோபி என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட் டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரூரில் லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரியை சஸ்பெண்டு செய்து தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார்.
    தருமபுரி:

    அரூரில் வனக்கோட்ட பொறியியல் பிரிவில் வனவராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன். இவர், தன்னுடைய பொது சேம நல நிதியில் (ஜி.பி.எப்.) இருந்து ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் கடன் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்த கடனுக்கான பட்டியல் அனுமதிக்கோரி (பில் பாஸ் செய்வதற்காக) அதே துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் தனலட்சுமியை வனவர் ரவிச்சந்திரன் அணுகியுள்ளார்.

    இந்த கடனுக்கான பட்டியல் அனுமதி அளிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கண்காணிப்பாளர் தனலட்சுமி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வனவர் ரவிச்சந்திரன் தருமபுரியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், டி.எஸ்.பி.க்கள் சுப்பிரமணியன் (தருமபுரி), கிருஷ்ணராஜன் (கிருஷ்ணகிரி), போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வனக்கோட்ட பொறியியல் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழங்கிய ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் நான்கினை கண்காணிப்பாளர் தனலட்சுமியிடம், வனவர் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனலட்சுமியை கையும் களவமாக பிடித்தனர். தொடர்ந்து, அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தனலட்சுமியை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். தற்போது அவரை சஸ்பெண்டு செய்து தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார்.
    ×