என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கலெக்டர் ஆபீசில் பெண் ஊழியரிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த அதிகாரி சஸ்பெண்டு
    X

    வேலூர் கலெக்டர் ஆபீசில் பெண் ஊழியரிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த அதிகாரி சஸ்பெண்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்போனில் சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் லோகநாதனை அதிரடியாக சஸ்பெண் செய்த உத்தரவிட்டார்.

    வேலூர்:

    பெண் ஊழியரிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த செய்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில்துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் என்பவர் நீண்ட நாட்களாக செல்போனில் சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரமும் அவரது தொல்லை அதிகரித்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பெண் ஊழியர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி விசாரணை மேற்கொண்டார்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதனை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்கும் அதிகாரிகள், சகஅலுவலர்கள் மீது புகார்கள் வந்தவுடன் உரிய நடவடிக்கைகள் உட னே எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் போதையில் சென்று சீண்டலில் ஈடுபட்ட பி.டி.ஓ. கோபி என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட் டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×