என் மலர்
நீங்கள் தேடியது "Prithviraj Sukumaran"
- மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.
பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி மகேஷ் பாபுவை பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. படப்பிடிப்பு விறுவிறுபப்ான நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மலையாள மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிக்கிறார் என்று ஏற்கனவே படக்குழு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தில் பிரித்விராஜ் மகேஷ் பாபுக்கு எதிராக வில்லன் வேடத்தில் கும்பா கேரக்டரில் நடிப்பார் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஸ்பைடர்மேன்-2 படத்தின் வில்லன் டாக்டர் ஆக்டோபஸ் வீல்சேரில் இருப்பதை இந்த போஸ்டர் நினைவூட்டுகிறது. அதேபோல் 24 படத்தில் சூர்யா வீல்சேரில் இருந்து கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதையும் நினைவூட்டுகிறது.
வருகிற 15-ந்தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற படம் உருவாகி வருகிறது.
- இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது.
லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்'. இந்த படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள். இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பிருத்விராஜ்-க்கு லைக்கா சுபாஸ்கரன் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார். சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.
- நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காண தயாராகுங்கள்.
- ஆடுஜீவிதம் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட சர்வைவல் அட்வென்ச்சர் படமாக 'தி கோட் லைஃப்- ஆடுஜிவிதம்' திரைப்படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, "தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங் முடிந்தது! இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். பின்னர் அதை 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். எபிக் திரைப்படம் இது! நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான 'ஆடுஜீவிதம்' கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
- ஆடுஜீவிதம் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிருத்விராஜ் இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்ததோடு, ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் வரை பட்டினி கிடந்து நடத்திருந்தார். நீண்ட காலம் தயாரிப்பு பணியில் இருந்த ஆடுஜீவிதம் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆடு ஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆடுஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிரித்விராஜ் வென்றார்.
இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான வெளிநாட்டு படப்பிரிவில் ஹாலிவுட் இசை மீடியா விருதை (HMMA) 'ஆடுஜீவிதம்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.







