என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்.எஸ்.ராஜமவுலி"
- மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
- இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
முன்னதாக இப்படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
- பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
- பாகுபலி திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி. இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதையொட்டி 'பாகுபலி' 2 பாகங்களை ஒரே படமாக 'பாகுபலி - The Epic' என்ற பெயரில் வரும் அக். 31ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அப்படங்களின் இயக்குநர் ராஜமவுளி அறிவித்துள்ளார்.
- 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியானது பாகுபலி திரைப்படம்.
- பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்தது.
2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் சில மாதங்களாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

இதற்கு தற்பொழுது பதில் கூறும் வகையில் படக்குழு பாகுபலி பாகம் 1 திரைப்படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் வெளிவிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இப்படம் ரீரிலீஸ்-லும் மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ்
- தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார்.
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ் (வயது 34). இவர் சினிமா நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தார்.
இந்த நிலையில் சீனிவாச ராவ் ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார். அதில் இயக்குனர் ராஜமவுலி தன்னை மிகப்பெரிய சித்ரவதைக்கு உட்படுத்தினார். அவருடைய நடவடிக்கை என்னை தற்கொலைக்கு தூண்டியது என தெரிந்திருந்தார்.
இந்த வீடியோவை அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பாகுபலி இயக்குனர் மீது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். எஸ். எஸ். ராஜமவுலியை பொய் கண்டுபிடிப்பு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிட வில்லை.
இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்








