என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.எஸ்.கே."

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
    • 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோற்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதை பிறகு ஆர்.சி.பி.(50 ரன்), ராஜஸதான் ராயல்ஸ் (6 ரன்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை (5 விக்கெட்) வீழ்த்தியது. அதன் பிறகு மும்பையிடமும் (9விக்கெட்), சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் (5 விக்கெட்) தோற்றது.

    சி.எஸ்.கே. அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது . எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும். நியூ சண்டிகரில் நடந்த போட்டியில் பஞ்சாப்பிடம் தோற்று இருந்தது. அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது வெற்றிக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 6- வது ஆட்டமாகும். இங்கு முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

    பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

    • பிரேவிஸ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.
    • சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக ஆடுவது அவ்வளவு எளிது கிடையாது.

    ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் அதிரடியாக ஆடினார். 25 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார்.

    இந்த நிலையில் பிரேவிஸ் சென்னை அணியில் நீண்ட காலம் இருப்பார் என்று முன்னாள் சுழற்பந்து வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிரேவிஸ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக ஆடுவது அவ்வளவு எளிது கிடையாது. தென் ஆப்பிரிக்க அணிக்காகவும், முதல்தர போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் ஐ.பி.எல். தொடரில் இணைந்து உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கூட அவர் கிடையாது. மாற்று வீரராக இணைந்தார். பிரேவிசிடம் அனைத்து ஷாட்டுகளும் ஆடும் திறன் இருக்கிறது. அவருக்கு சி.எஸ்.கே.வுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சி.எஸ்.கே. அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் சி.எஸ்.கே. அணி உள்ளது.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 5-ல் தோற்றது. 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்) , கொல்கத்தா (8 விக்கெட்) என தொடர்ச்சியாக தோற்றது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே அணி 2-வது வெற்றிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. எஞ்சி இருக்கும் 8 போட்டியில் 7-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.

    சி.எஸ்.கே. கேப்டனாக பணியாற்றிய ருதுராஜ் கெய்க்வாட் கவுகாத்தியில் நடந்த போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆட்டத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பையை சேர்ந்த 17 வயதான தொடக்க வீரர் ஆயுஷ்மத்ரே சேர்க்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எஞ்சிய போட்டிகளில் சி.எஸ்.கே. அணியில் இணைந்து கொள்வார். வருகிற 20-ந் தேதி மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. 

    ஆயுஷ் மத்ரே ஏற்கனவே தேர்வு பயிற்சி முகாமில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 17 வயதான இவர் இதுவரை 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 504 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்

    இதன்மூலம் பிரித்விஷாவின் வாய்ப்பு பறிபோகியுள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகாத அவர் ருதுராஜூக்கு பதிலாக அணியில் இடம் பெறுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
    • புள்ளிப்பட்டியலில் மும்பை 9ம் இடத்தில் உள்ளது

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.

    இதனையடுத்து, தொடர் தோல்விகளால் துவண்டு கிடைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குச் சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 9ம் இடத்தில் உள்ளது.

    • சி.எஸ்.கே. அணியை வீழ்த்திய பிறகு இன்ஸ்டாவில் அதிக Follower-களை ஆர்.சி.பி. பெற்றது
    • எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி சி.எஸ்.கே. தான்.

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.

    அந்த சமயத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருந்தது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

    அவ்வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை முந்திய ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது.

    தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. படைத்துள்ளது.

    அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொளவதை ஒட்டி தக் லைஃப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், கமல்ஹாசன், எம்.எஸ்.தோனி ஒருபக்கமும் சிம்பு, ருதுராஜ் மறுபக்கமும் இடம்பெற்றுள்ளனர்.

    • சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

    எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
    • குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.

    பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.

    துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.

    சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.

    • சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
    • ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ்

    மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு

    ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி

    ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா

    ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத்

    ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப்

    மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான்

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    மார்ச் 31 : மும்பை Vs கொல்கத்தா

    ஏப்ரல் 7 : மும்பை Vs பெங்களூரு

    ஏப்ரல் 17: மும்பை Vs ஐதாராபாத்

    ஏப்ரல் 20: மும்பை Vs சென்னை

    ஏப்ரல் 27: மும்பை Vs லக்னோ

    மே 6       : மும்பை Vs குஜராத்

    மே 15     : மும்பை Vs டெல்லி

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    ஏப்ரல் 2   : பெங்களூரு Vs குஜராத்

    ஏப்ரல் 10 : பெங்களூரு Vs டெல்லி

    ஏப்ரல் 18 : பெங்களூரு Vs பஞ்சாப்

    ஏப்ரல் 24 : பெங்களூரு Vs ராஜஸ்தான்

    மே 3        : பெங்களூரு Vs சென்னை

    மே 13      : பெங்களூரு Vs ஐதாராபாத்

    மே 17      : பெங்களூரு Vs கொல்கத்தா

    குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் திரிபாதியை வாங்கியது.
    • இதற்கு முன்பு ராகுல் திரிபாதி ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், சிஎஸ்கே அணி வீரர்களுடன் ராகுல் திரிபாதி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் திரிபாதியை வாங்கியது. இதற்கு முன்பு அவர் ஐதராபாத் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    இதனிடையே தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட தோனி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தோனி வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது.

    ×