என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு
    X

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு

    • 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.
    • 3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும்.

    அகமதாபாத்:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.

    இரு அணிகளும் சம்பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இரு அணிகளும் இன்று மோதுவது 37-வது முறையாகும். இதுவரை நடந்த 36 ஆட்டத்தில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியுடன் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த சீசனில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றன.

    'குவாலிபையர்1' ஆட்டத்தில் பஞ்சாப்பை 101 ரன்னில் சுருட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்படுகிறது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.

    3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும். கடந்த 2022 முதல் இதே பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    Next Story
    ×