என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விதிமீறிய இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி
    X

    விதிமீறிய இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

    • கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த தொடர்ல் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவர் வீச தாமதமானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×