என் மலர்
இந்தியா

இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சி - நடிகர் ரவி மோகன்
- மஹாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- ஏராளமான மக்கள் கடவுளிடம் வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோவிலில் நடந்த பஸ்ம ஆரத்தியில் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மஹாகாலேஷ்வர் கோவிலில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இது ஒரு அழகான ஆன்மீக இடம். ஏராளமான மக்கள் கடவுளிடம் வருகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்கிறார். இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.
உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள். இது பெண்கள் சக்தி! கோ கேர்ள்ஸ்!
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






