search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Examinations"

    • காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    திருப்பூர்:

    பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 19ந் தேதி முதல் 27ந் தேதி வரை, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு வழக்கமாக, அந்தந்த மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    ஆனால் தற்போது நடக்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து வரும் வினாத்தாளை அந்தந்த மாவட்டங்களில் நகலெடுத்து தேர்வு நாளன்று காலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், காலாண்டு தேர்வை பொதுவினாத்தாள் முறையில் நடத்துவதன் மூலம், கல்வியில் பின்தங்கிய பள்ளிகளை கண்டறியலாம்.

    அங்குள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணலாம். குறிப்பாக 6-ம் வகுப்பில் இருந்தே, பொது வினாத்தாள் முறையில் இனிவரும் தேர்வுகளை நடத்த வேண்டும்.

    அப்போது தான் மாணவர்களின் கற்றல் நிலையை பரிசோதிக்க முடியும் என்றனர்.

    • 2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
    • இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினர்.

    3 நாட்கள் விடுமுறை

    தொடர்ந்து நாளை (18-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி), திங்கட்கிழமை (20-ந்தேதி) ஆகிய 3 நாட்கள் தேர்வு கிடையாது. தேர்வுக்கான பாடங்களை படிக்கும் விதமாக மாணவ- மாணவிகளுக்கு இந்த 3 நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    ×