என் மலர்tooltip icon

    உலகம்

    வங்கதேசத்தில் சோகம்: ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி
    X

    வங்கதேசத்தில் சோகம்: ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி

    • ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    டாக்கா:

    வங்கதேசம் தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷியல்பாரி பகுதியில் உள்ள ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அருகிலுள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து நச்சுப் புகையை சுவாசித்ததால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.

    Next Story
    ×