search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 Over World Cup"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
    • வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்து உள்ளது.

    வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    • நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள்.
    • கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். உங்களது பார்மை மறந்து விடுவார்கள். கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர். அவர்கள் விரும்பும் போது ஓய்வு பெற தகுதியானவர்கள்.

    எப்போது நினைக்கிறார்களோ அப்போது அவர்கள் தங்களின் ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் விளையாட நான் விரும்புகிறேன். அது மூத்த வீரர்களின் வேலைப் பளுவை குறைக்கும். இந்த 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வந்து அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பைக்கு அணியில் இடம் பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு கோலி, ரோகித் 20 ஓவர் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.

    துபாய்:

    9-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.

    ×