என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தோம்: சீன வெளியுறவு மந்திரி சர்ச்சை பேச்சு
    X

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தோம்: சீன வெளியுறவு மந்திரி சர்ச்சை பேச்சு

    • சீனாவின் பீஜிங்கில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
    • இதில் பேசிய சீன வெளியுறவு மந்திரி, இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.

    பீஜிங்:

    பீஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யீ, கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலின்போது தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாகக் குறிப்பிட்டார்.

    சர்வதேச அளவில் மோதல்களைத் தீர்ப்பதிலும், நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் சீனா நியாயமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறிவரும் நிலையில் சீன மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×