search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shopian encounter"

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் டிரகாட் சுகன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் ஹிந்த் சிதாபோரா பகுதிய்ல் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ShopianEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் சாஹிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்புக்கும் இடையிலான சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    #ShopianEncounter
    ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ShopianEncounter #JammuAndKashmir #JaisheMohammed
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம், மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் பாலகோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் மீது இந்திய விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள், பயங்கரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் மூத்த தளபதிகள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ShopianEncounter #JammuAndKashmir #JaisheMohammed

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையின்போது, 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் நாடிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை இன்று காலையில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.



    சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். 2 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #JKEncounter

    ×