என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » syed salahuddin
நீங்கள் தேடியது "Syed Salahuddin"
பாகிஸ்தானில் இருந்தவாறு காஷ்மீரில் பிரிவினைவாதத்தையும் இந்தியா மீது வன்முறை தாக்குதல்களையும் ஊக்குவித்து வரும் பயங்ரகவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்துகளை இந்திய அரசு முடக்கியது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin
ஜம்மு:
பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் உள்ள பலநாடுகள் தடை விதித்துள்ளன. இந்த இயக்கத்தின் தலைவனான சையத் சலாஹுதீன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிலரை மூளைச்சலவை செய்து பிரிவினைவாத செயல்களை ஊக்குவித்து வருகிறான்.
மேலும், இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களில் இவனுக்கு தொடர்புள்ளதும் உறுதிபட தெரியவந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் தேர்ச்சிபெற்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் துணையுடன் சையத் சலாஹுதீன் ஏராளமான பண உதவி செய்து வருவதையும் இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணையில் இவனிடம் பண உதவிபெற்று காஷ்மீரின் பண்டிப்போரா மற்றும் அம்மாநிலத்தில் சொத்துகளை வாங்கியிருந்த 7 பேருக்கு சொந்தமான ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 சொத்துகளை இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கைப்பற்றி, முடக்கி வைத்துள்ளது.
இவர்களில் ஒருவரான முஹம்மது ஷபி ஷா என்பவன் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து நிதியுதவி செய்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin
பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் உள்ள பலநாடுகள் தடை விதித்துள்ளன. இந்த இயக்கத்தின் தலைவனான சையத் சலாஹுதீன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிலரை மூளைச்சலவை செய்து பிரிவினைவாத செயல்களை ஊக்குவித்து வருகிறான்.
மேலும், இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களில் இவனுக்கு தொடர்புள்ளதும் உறுதிபட தெரியவந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் தேர்ச்சிபெற்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் துணையுடன் சையத் சலாஹுதீன் ஏராளமான பண உதவி செய்து வருவதையும் இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணையில் இவனிடம் பண உதவிபெற்று காஷ்மீரின் பண்டிப்போரா மற்றும் அம்மாநிலத்தில் சொத்துகளை வாங்கியிருந்த 7 பேருக்கு சொந்தமான ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 சொத்துகளை இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கைப்பற்றி, முடக்கி வைத்துள்ளது.
இவர்களில் ஒருவரான முஹம்மது ஷபி ஷா என்பவன் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து நிதியுதவி செய்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டி தந்ததாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத், சையத் சலாஹுதீன் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை கோர்ட் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. #Nonbailablewarrants #HafizSaeed #SyedSalahuddin
புதுடெல்லி:
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி அளிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது என்.ஐ.ஏ. எனப்பட்டும் தேசிய புலனாய்வு முகமை கடந்த 30-5-2017 அன்று வழக்குப்பதிவு செய்தது.
இதைதொடர்ந்து, காஷ்மீர், அரியானா, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 60 இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சுமார் 300 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இதன்மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டம் 121-ன்கீழ் 12,794 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவில் உள்ள பிரிவினைவாத சக்திகளுக்கு நிதி திரட்டித்தந்து இங்கு பயங்கரவாத தாக்குதல்களை ஊக்குவித்ததாக பாகிஸ்தானில் இருக்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் உள்பட 12 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்களை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்குமாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு இணங்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத், சையத் சலாஹுதீன் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விடுவிக்க முடியாத கைது உத்தரவு பிறப்பித்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். #Nonbailablewarrants #HafizSaeed #SyedSalahuddin
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X