என் மலர்
நீங்கள் தேடியது "asset freezing"
பாகிஸ்தானில் இருந்தவாறு காஷ்மீரில் பிரிவினைவாதத்தையும் இந்தியா மீது வன்முறை தாக்குதல்களையும் ஊக்குவித்து வரும் பயங்ரகவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்துகளை இந்திய அரசு முடக்கியது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin
ஜம்மு:
பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் உள்ள பலநாடுகள் தடை விதித்துள்ளன. இந்த இயக்கத்தின் தலைவனான சையத் சலாஹுதீன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிலரை மூளைச்சலவை செய்து பிரிவினைவாத செயல்களை ஊக்குவித்து வருகிறான்.
மேலும், இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களில் இவனுக்கு தொடர்புள்ளதும் உறுதிபட தெரியவந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் தேர்ச்சிபெற்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் துணையுடன் சையத் சலாஹுதீன் ஏராளமான பண உதவி செய்து வருவதையும் இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணையில் இவனிடம் பண உதவிபெற்று காஷ்மீரின் பண்டிப்போரா மற்றும் அம்மாநிலத்தில் சொத்துகளை வாங்கியிருந்த 7 பேருக்கு சொந்தமான ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 சொத்துகளை இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கைப்பற்றி, முடக்கி வைத்துள்ளது.
இவர்களில் ஒருவரான முஹம்மது ஷபி ஷா என்பவன் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து நிதியுதவி செய்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin
பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் உள்ள பலநாடுகள் தடை விதித்துள்ளன. இந்த இயக்கத்தின் தலைவனான சையத் சலாஹுதீன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிலரை மூளைச்சலவை செய்து பிரிவினைவாத செயல்களை ஊக்குவித்து வருகிறான்.
மேலும், இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களில் இவனுக்கு தொடர்புள்ளதும் உறுதிபட தெரியவந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் தேர்ச்சிபெற்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் துணையுடன் சையத் சலாஹுதீன் ஏராளமான பண உதவி செய்து வருவதையும் இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணையில் இவனிடம் பண உதவிபெற்று காஷ்மீரின் பண்டிப்போரா மற்றும் அம்மாநிலத்தில் சொத்துகளை வாங்கியிருந்த 7 பேருக்கு சொந்தமான ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 சொத்துகளை இந்திய பொருளாதார அமலாக்கத்துறை கைப்பற்றி, முடக்கி வைத்துள்ளது.
இவர்களில் ஒருவரான முஹம்மது ஷபி ஷா என்பவன் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக இருந்து நிதியுதவி செய்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #EDattaches #terrorfunding #SyedSalahuddin
கொடைக்கானலில் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அமலாக்கத்துறை முடக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். #INXMediaCase #KarthiChidambaram
கொடைக்கானல்:
முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு சொந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரூ.54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டது.
கொடைக்கானலில் நாயுடுபுரம் மற்றும் அட்டுவம்பட்டியில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான பங்களாக்கள் உள்ளன. மேலும் 3 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளது.
அமலாக்கத்துறை உத்தரவை அடுத்து இந்த சொத்துக்களை முடக்கி அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.25 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #INXMediaCase #KarthiChidambaram
முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு சொந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரூ.54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டது.
கொடைக்கானலில் நாயுடுபுரம் மற்றும் அட்டுவம்பட்டியில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான பங்களாக்கள் உள்ளன. மேலும் 3 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளது.
அமலாக்கத்துறை உத்தரவை அடுத்து இந்த சொத்துக்களை முடக்கி அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.25 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #INXMediaCase #KarthiChidambaram
ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ஊட்டியில் உள்ள ப. சிதம்பரத்தின் குடும்ப சொத்துக்கள் முடக்கப்பட்டது. #INXMediaCase #KarthiChidambaram
ஊட்டி:
ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ. 54 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி டெல்லி, ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரியில் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பர்ன்ஹில் பகுதியில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் குடும்ப சொத்தான கொலடியா பங்களா உள்ளது.
இந்த பங்களாவும் முடக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 3.75 கோடியாகும். இதே போல் கோத்தகிரியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பங்களாவும் முடக்கப்பட்டு இருக்கிறது. #INXMediaCase #KarthiChidambaram
ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ. 54 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி டெல்லி, ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரியில் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பர்ன்ஹில் பகுதியில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் குடும்ப சொத்தான கொலடியா பங்களா உள்ளது.
இந்த பங்களாவும் முடக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 3.75 கோடியாகும். இதே போல் கோத்தகிரியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பங்களாவும் முடக்கப்பட்டு இருக்கிறது. #INXMediaCase #KarthiChidambaram






