என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டம்
    X

    சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டம்

    • சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • 39-வது நாளாக நீட்டிப்பு

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியிடைநீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் 39-ம் நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    .நிர்வாகத்தின் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக ஆட்குறிப்பு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாலை ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமாந்துறை டோல் பிளாசா வில் 39-வது நாட்களாக போராட்டம் செய்து வந்தநிலையில் மாநில அரசும், மத்திய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் இந்த நிர்வாகத்திற்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் ஊழியர்களை வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து ஊழியர்கள் அனைவரும் தூக்கு கயிற்றை முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×