search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Expropriation"

    • ரியல் எஸ்டேட் அதிபர் சாமியார் சத்தியத்துடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது சாமியாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கொலை செய்தவர்களை சாமியார் சத்தியம் புதைத்தாரா? அல்லது உடல்களை எரித்து விட்டாரா? என்பது தெரியவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சத்யம் (வயது 42). மந்திரவாதியான இவர் பில்லி சூனியம் நீக்குவதாக கூறி வந்தார்.

    மேலும் திடீர் அதிர்ஷ்டம் வேலை வாய்ப்பு திருமணத்தடை சொத்து கைவசப்படுத்துவது, வசியம் செய்வது, மந்திர பூஜையால் எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவதாகவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் திடீரென மாயமானார். இது குறித்து அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் கடைசியாக சந்தித்த நபர்கள் குறித்து விசாரணையில் இறங்கினர்.

    அப்போது ரியல் எஸ்டேட் அதிபர் சாமியார் சத்தியத்துடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது சாமியாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாமியார் ரியல் எஸ்டேட் அதிபரை தலை துண்டித்து கொலை செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் சொத்து அபகரித்தது தெரியவந்தது. தொடர்ந்து சாமியாரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாமியார் சத்தியம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. சாமியார் சத்தியம் தன்னிடம் பில்லி, சூனியம் நீக்குவதற்காக பூஜை செய்ய வருபவர்கள் குறித்த பின்னணியை அறிந்து கொண்டுள்ளார்.

    அவர்களை தனியாக வரவழைத்து அதிக பணம் நகை வாங்கியுள்ளார். பின்னர் அவர்களை தலை துண்டித்து கொலை செய்துள்ளார்.

    ஐதராபாத்தில் வாலிபர் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். வாலிபர் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை என சாமியாரை தட்டி கேட்டார். அப்போது வாலிபரை சாமியார் கொலை செய்துள்ளார்.

    சாமியார் இதுவரை 21 பேரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம் சொத்து உள்ளிட்டவற்றை சாமியார் அபகரித்துள்ளார்.

    கொலை செய்தவர்களை சாமியார் சத்தியம் புதைத்தாரா அல்லது உடல்களை எரித்து விட்டாரா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    21 பேர் தவிர மேலும் யாரையாவது சாமியார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திரா, தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதே போல ஆந்திர மாநிலம் வனபர்த்தி மாவட்டம் நாகப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாமியாரிடம் தங்கள் குடும்ப பிரச்சினை தீர்க்க வேண்டும் எனக் கூறி வந்தனர். அவர் குடும்பத்தினர் 4 பேரையும் வரவழைத்து பில்லி சூனிய பூஜை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.அவர்களை தலை துண்டித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அவர்கள் உடல்களை என்ன செய்தார் என்பது தெரியவில்லை. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சி தாயனூரில் தாயை ஏமாற்றி வீடு, நிலத்தை அபகரித்த மகள் வெளியேறச் சொல்லி வீட்டை சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்
    • போலீசார் மகள் சந்திரா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள தாயனூர் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 72). இவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான மகள் சந்திரா, வெள்ளையம்மாளிடம் இரண்டு சென்ட் நிலம் கேட்டுள்ளார்.இதற்கு அவர் ஒப்புக் கொண்டு சந்திரா தயார் செய்த ஆவணங்களில் கையெழுத்துள்ளார்.

    அப்போது மூதாட்டிக்கு தெரியாமல் அவரை ஏமாற்றி வீடு மற்றும் மொத்த நிலத்தையும் சந்திரா அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சந்திரா தனது கணவர் சங்கன், மகன்கள் கார்த்திக், பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளையம்மாளை வீட்டிலிருந்து வெளியேறச் சொல்லி வீட்டை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளையம்மாள் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் மகள் சந்திரா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
    • நவல்பட்டு அருகே பரபரப்பு

    திருச்சி,

    திருச்சி இ.பி. ரோடு கருவாட்டு பேட்டை பகுதி–யைச் சேர்ந்த குப்புசாமி மனைவி முத்தம்மாள், கீரைக்கொல்லை தெரு கிருஷ்ணன் ரோடு பகுதியை சேர்ந்த ராஜாத்தி, திருச்சி பூலோகநாதர் கோவில் தெருவை சேர்ந்த நீலா, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியி–ருப்பதாவது:-

    நாங்கள் மேற்கண்ட முக–வரியில் வாடகை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு தமிழக அரசால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சென்ட் நிலம் வீதம் நவல்பட்டு பூலாங்குடி கிராமத்தில் இலவச வீட்டு மனையாக வழங்கப்பட்டது.அப்போது எங்களுடன் சேர்த்து மொத்தம் 250 பேருக்கு பட்டா வழங்கப்பட் டது. இந்த நிலையில் தற் போது அரியமங்கலம் உக் கடை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பட்டா ஆவணங்களை அடயாட்களை வைத்து மிரட்டி பிடுங்கி வருகிறார். மேலும் நிலம் என்னுடைய பூர்வீக இடம். உங்களுக்கு யாருக்கும் இதில் உரிமை இல்லை. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் தருகிறேன் என மிரட்டி எங்களிடமிருந்து பட்டாக்களை பறித்து வைத்துக் கொண்டு வேறு நபர்களுக்கு இரண்டு லட்சம், 3 லட்சம் என விற்பனை செய்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களது இடத்தில் எந்தவித இடை–யூறும் இல்லாமல் வீடு கட்டி வசிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நாங்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
    • தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் என்னுடைய பட்டா நிலத்தை அவரது பெயரில் எழுதிக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியை சேர்ந்த கூத்தன் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். எனது 2-வது மகன் வெங்கடேசன் எனக்கு உதவியாக விவசாயத்தை கவனித்து வந்தார்.

    இதற்கிடையே விவசாய செலவிற்கு கடன் பெறுவதற்காக நிலத்தை அடமானம் வைக்க வேண்டும் என்று என்னிடம் கூறி வெங்கடேஷ் கெங்கவல்லி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் என்னுடைய பட்டா நிலத்தை அவரது பெயரில் எழுதிக் கொண்டார்.

    பின்னர் வெங்கடேசனும் அவரது மனைவியும் சேர்ந்து அனைத்து நிலங்களையும் அவர்கள் பெயரில் எழுதிக் கொண்டு எங்களை அடித்து வெளியேற்றி விட்டனர் .இதனால் நாங்கள் மூத்த மகன் ராமசாமி வீட்டில் வசித்து வருகிறோம். எனவே இந்த பத்திர பதிவை ரத்து செய்து எங்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    ×