search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajit doval"

    • ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார்.
    • அந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 5-வது பிராந்திய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ரஷியா மட்டுமின்றி, இந்தியா, சீனா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்கிருந்து அமெரிக்க படைகள் தப்பி ஓடியது தவறு. அப்போதிருந்து அங்கு நிலைமை முன்னேறவில்லை. அல்-கொய்தா உள்பட சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை அங்கு முடுக்கி விட்டுள்ளன. 40 லட்சம் மக்கள், அவசரமான மனிதாபிமான உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கிடைக்கும் அபினில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து செல்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள சில நாடுகள் முயற்சிக்கலாம். இவற்றுக்கெல்லாம் நாம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரத்துக்கு தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.
    • அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் வீடு டெல்லியில் உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் அவருக்கு சி.ஐ.எஸ்.எப். கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    டெல்லியில் உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இருக்கும் அஜித் தோவலின் வீட்டை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காலையில் பெங்களூருவை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் காரைக் கொண்டு மோத முயன்றார். ஆனால் அவர் இடையிலேயே வழிமறித்து கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தின் போது அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 கமாண்டோ வீரர்கள் மற்றும் அஜித் தோவலுக்கு பாதுகாப்பு வழங்கும் படையின் தலைவரான டி.ஐ.ஜி மற்றும் அவரது கீழ் அதிகாரி ஆகியோர் மீது நீதி விசாரணை நடந்து வந்தது. இதில் அஜித் தோவலின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், அஜித் தோவல் வீட்டின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த 3 கமாண்டோ வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அஜித் தோவலின் மகன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #JairamRamesh #AjitDoval #VivekDoval
    புதுடெல்லி:

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல், கேமன் தீவுகளில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதலீடுகளில் சந்தேகம் இருப்பதாகவும், ‘தி கேரவன்’ இதழில் கடந்த ஜனவரி மாதம் கட்டுரை வெளியானது. இதனை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை விவேக் தோவல் மறுத்தார். அத்துடன், கட்டுரை எழுதிய கவுசல் ரோப், கட்டுரை வெளியிட்ட கேரவன் ஆசிரியர் பரேஷ் நாத், கட்டுரையை சுட்டிக்காட்டி செய்தியாளர் சந்திப்பு நடத்திய ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்றத்தில், விவேக் தோவல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பெருநகர நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால் முன்பு விசாரணைக்கு வந்தது.  கவுசல் சரோப், பரேஷ் நாத் ஆகியோர் ஆஜராகினர். ஜெய்ராம் ரமேஷ் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆஜரானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் மே 9-ம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்ராம் ரமேஷ், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி சமர் விஷால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 20 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார்.

    இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 27-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.  #JairamRamesh #AjitDoval #VivekDoval
    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது கூறிய குற்றச்சாட்டை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

    ராகுல் காந்தி பேசுகையில் ‘கடந்த 1999ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க வேண்டி , இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. அப்போது 161 பயணிகள் பயணம் செய்தனர்.  புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சிறையிலிருந்து யார் விடுவித்தது. எந்த கட்சி விடுவித்தது? என சற்றே சிந்தித்து பாருங்கள். முந்தைய பாஜக அரசும், தற்போதைய தேசிய  பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜி்த் தோவலும் சேர்ந்து, விமானத்தில் மசூத் அசாரை அழைத்துச் சென்று, கந்தகாரில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். புல்வாமா தாக்குதலுக்கு அஜித் தோவல் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார்’ என குற்றம் சாட்டினார்.



    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தேசிய பாதுகாப்புத்துறை விளக்கம் கூறியுள்ளது. இதில், ‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க சொன்னது அன்றைய வாஜ்பாய் அரசின் முடிவாகும். இந்த முடிவு விமானத்தில் பயணம் செய்த 161 பயணிகளின் பாதுகாப்பினை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். மசூத் அசாரின் விடுதலைக்காக எடுக்கப்படவில்லை. இந்த முடிவு நல்லதோ கெட்டதோ அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிடுத்து அரசின் முடிவுகளை செயல்படுத்திய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேசுவது சரியானதல்ல. மேலும் அஜித் தோவல் மசூத் அசாருடன் விமானத்தில் பயணித்ததாக கூறியது தவறான தகவல் ஆகும்’ என தெரிவித்துள்ளது. #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar



    எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. #PulwamaAtack #AjitDoval #USSupportIndia
    புதுடெல்லி:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.



    இதற்கிடையே, அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, புல்வாமா தாக்குதல் தொடர்பாக, அவரிடம்  அஜித் தோவல் தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஜான் போல்டன் உறுதியளித்துள்ளார்.

    இந்த உரையாடல் குறித்து ஜான் போல்டன் கூறுகையில், ‘தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அஜித் தோவலிடம் நான் கூறினேன். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக அவரிடம் 2 முறை பேசினேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

    பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளது’ என்றார். #PulwamaAtack #AjitDoval #USSupportIndia
    காஷ்மீரில் முதல்மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்துறை மந்திரியுடன் ஆலோசித்து வருகிறார். #BJPDumpsPDP
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தது. ஜம்மு முதல்மந்திரி மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பா.ஜ.க அறிவித்தது.

    இதையடுத்து பெரும்பான்மையை இழந்த மெகபூபா முப்தி தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேறியதற்கு அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்..

    இந்நிலையில், முதல்மந்திரியின் ராஜினாமாவைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் தற்காலிகமாக ஜனாதிபதி ஆட்சி அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு சிறப்பு செயலாளர் ரினா மித்ரா ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

    விரைவில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #BJPDumpsPDP
    ×