என் மலர்
நீங்கள் தேடியது "பீகார் வாலிபர்"
- கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள்.
- ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது.
சென்னை:
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 26-ந்தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
காவலாளி சிக்கந்தரிடம் வேலை கேட்டு அடைக்கலமான நிலையில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மீது சிக்கந்தருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மது போதையில் சிக்கந்தர் தனது நண்பர்களோடு சேர்ந்து முனிதா குமாரியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் தான் சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கவுரவ் குமார், முனிதா குமாரி, 2 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொன்று தனித்தனியாக மூட்டை கட்டி வீசியது தெரிய வந்தது.
முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசிய கொலையாளிகள் கவுரவ் குமாரின் உடலை நடுரோட்டில் போட்டுச் சென்றதால் இந்த கொலை சம்பவம் உடனடியாக வெளியில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து குழந்தையின் உடலை அதே பகுதியில் கூவத்தில் மீட்ட போலீசார் கடந்த 4 நாட்களாக பீகார் வாலிபரின் மனைவி முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடி வந்தனர்.
கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முனிதா குமாரியும், குழந்தையும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கடந்த 4 நாட்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
பெருங்குடி குப்பை கிடங்கில் தெரு நாய்கள் புகுந்து உடலை தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாகவும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்தனர்.
ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் வாலிபரின் மனைவியான முனிதா குமாரியின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பீகார் வாலிபர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையின் உடல் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் முனிதா குமாரின் உடலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்காக பீகார் வாலிபர் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். 3 பேரின் உடல்களும் ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
கொலையுண்ட முனிதா குமாரி காவலாளி சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முனிதா குமாரியின் பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் கற்பழிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
பீகார் வாலிபரின் மனைவி உடல் கிடைத்ததை தொடர்ந்து இந்த வழக்கில் உரிய முறையில் துப்பு துலக்கி கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
3 பேர் கொலை வழக்கில் வீடியோ பதிவு காட்சிகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்று மேலும் பல தகவல்களை சேகரித்து கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகர போலீசார் இந்த வழக்கு விசாரணையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்னும் 3 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்றார்.
- மணிஷ் காஷ்யப்பை கைது செய்து பீகார் சிறையில் அடைத்தனர்.
- மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோ தமிழகத்தில் வாழ்ந்து வரும் வட மாநிலத்தினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மை இல்லை என்றும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 'யூ-டியூபர்' மணிஷ் காஷ்யப் (வயது35) என்பவர் தான் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோவை வெளியிட்டது தெரிய வந்தது. போலி வீடியோ வெளியிட்டது தொடர்பாக மணிஷ் காஷ்யப் உள்பட 4 பேர் மீது பீகார் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மணிஷ் காஷ்யப்பை கைது செய்து பீகார் சிறையில் அடைத்தனர். போலி வீடியோ பரப்பியது தொடர்பாக 'யூ-டியூபர்' மணிஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் மணிஷ் காஷ்யப் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதனை தொடர்ந்து பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிஷ் காஷ்யப் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கு தொடர்பாக கடந்த 30-ந் தேதி மதுரை மாவட்ட முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். அதன்பேரில் 3 நாள் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி கொடுத்தார். இதையடுத்து மணிஷ் காஷ்யப்பை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் காவல் முடிந்த நிலையில் மதுரை கோர்ட்டில் நேற்று மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது விசாரணையில் மணிஷ் காஷ்யப் தகவல் எதுவும் சரியாக தெரிவிக்கவில்லை என்பதால், மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மணிஷ் காஷ்யப் தரப்பில் போலீஸ் விசாரணையில் மனித உரிமை மீறப்படுவதால், மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து மணிஷ் காஷ்யப்பை வருகிற 19-ந் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி டீலாபானு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய ஜெயிலில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் இன்று பிறப்பித்தார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மணிஷ் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான உத்தரவு மதுரை மத்திய ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
- பீகார் மாநிலத்தில் தன்வீர் கான் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ராஞ்சி:
பீகார் மாநிலம் பகலாப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது மாடல் அழகி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தில் மாடலிங் தொழில் செய்து வந்தார். அப்போது அந்த நிறுவன அதிபரான தன்வீர் கானுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவர் மாடல் அழகியை விதவிதமாக ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகிறது
சில மாதங்களுக்கு முன்பு தன்வீர் கான் மாடல் அழகியை பாங்காங் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை மிரட்டி ஒரு ஆண்டுக்கு மேலாக பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தார். மேலும் மாடல் அழகியை மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்தார்.
இதுபற்றி வெளியில் சொன்னால் தன்னிடம் உள்ள ஆபாச படங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் நண்பர் ஒருவர் அறிவுரை கூறியதால் அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டார்.
பின்னர் இது குறித்து மாடல் அழகி மும்பை வெர்சோவா போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்பதால் மும்பை போலீசார் இந்த வழக்கை ராஞ்சிக்கு மாற்றினார்கள். போலீசர் தன்வீர் கான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
அவரை ராஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என அவர் போலீசில் தெரிவித்து உள்ளார். தன் நிறுவனத்தில் அந்த பெண் மாடலிங் தொழில் செய்து வந்ததாகவும், அவரால் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் என்னுடைய நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி வந்தார் என்று தன்வீர் கான் குறித்து போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் யார்? சொல்வது உண்மை என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளைஞருக்கு எக்ஸ் ரே எடுத்ததில் அவரது வயிற்றில் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- சிகிச்சைக்கு பின்னர் இளைஞர் நலமாக உள்ளார்.
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் (22) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அந்த இளைஞரை அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அவருக்கு எக்ஸ் ரே எடுத்ததில் அவரது வயிற்றில் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை டாக்டர்கள் அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவின் தலைவர் டாக்டர் அமித் குமார் கூறுகையில்,
நாங்கள் இளைஞரிடம் கேட்டபோது, அவர் சமீபத்தில் உலோக பொருட்களை விழுங்க தொடங்கியது தெரிய வந்தது.
சிகிச்சைக்கு பின்னர் இளைஞர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு சில மனநலப் பிரச்சனைகள் உள்ளன, அதற்காக அவர் மருந்து உட்கொண்டு வருகிறார். இளைஞர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார்.






