search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son in law"

    • மது அருந்தியிருந்த மருமகன் தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • இது தொடர்பாக மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த மருமகனுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று உறுதி செய்தது. இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றும், பாதிக்கப்பட்ட பெண் அவருக்கு தாய் போன்றவர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தனது மாமியாரிடம் மருமகன் சண்டை போட்டுள்ளார். பின்னர் மருமகனின் வற்புறுத்தலின் பேரில் அவரது வீட்டிற்கு மாமியார் சென்றுள்ளார்.

    அந்த சமயத்தில் மது அருந்தியிருந்த மருமகன் தனது மாமியாரை 3 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பெண் தனது மகளிடம் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த வழக்கை 2018 டிசம்பரில் விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், தனது 55 வயது மாமியாரை பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 2022 மார்ச் மாதம் குற்றவாளி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    மேல்முறையீடு மனுவின் விசாரணையில், "தனது மாமியாருடன் நடந்த உடலுறவு சம்மதத்துடன் நடந்த உறவு என்றும் அது பலாத்காரம் இல்லை" என்றும் குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 55 வயதான அப்பெண் போலியான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், ஒருவேளை பரஸ்பர சம்மதத்துடன் இந்த சம்பவம் நடந்திருந்தால் அதை தனது மகளிடம் அவர் சொல்லியிருக்க மாட்டார், போலீசிலும் புகார் அளித்திருக்க மாட்டார் என்று தெரிவித்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

    • ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு விருந்து.
    • விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குட்பட்ட, தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

    தமிழில் ஆடி மாதம் போன்று ஆந்திரா மாநிலத்தில் ஆஷாதா மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதம் ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆகும்.

    இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரி வீட்டில் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.

    விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.

    பிரமாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவிதேஜா," ஒரே இடத்தில் 100 வகையான உணவுகளை கண்டது மகிழ்ச்சி. மாமியாரின் இச்செயல் தன்னை மிகுந்த ஆச்சரியத்தில ஆழ்த்தியது" என்றார்.

    • இரு குடும்பத்தினருக்கு இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளது.
    • இதுதொடர்பாக சமரசம் பேசுவதற்காக சண்டிகர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்தனர்.

    சண்டிகர்:

    முன்னாள் போலீஸ் அதிகாரியான மல்விந்தர் சிங் சித்துவுக்கும், அவரது மருமகன் ஹர்பிரித் சிங் குடும்பத்துக்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

    இரு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் பேசுவதற்காக சண்டிகர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அப்போது கழிவறை செல்ல வேண்டும் என மல்விந்தர் சிங் கேட்டுள்ளார். அவருக்கு வழிகாட்ட மருமகன் சென்றுள்ளார்.

    சிறிது நேரத்தில் நீதிமன்றத்தின் உள்ளேயே துப்பாக்கி சுடும் சத்தம் திடீரென கேட்டது.

    மாமனார் மல்விந்தர் சிங், மருமகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 5 குண்டுகள் பாய்ந்து மருமகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

    துணிச்சலான சில வக்கீல்கள் மாமனாரை மடக்கிப் பிடித்து அருகிலுள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினர். இதுதொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து மல்விந்தர் சிங்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் மருமகனை மாமனார் சுட்டுக் கொன்ற சம்பவம் சண்டிகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார்.
    • இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை விசாரித்தனர்.

    பாட்னா:

    பீகாரில் பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் இவருக்கு திருமணமானது.

    இதற்கிடையே, மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார். அங்கு தன் மாமியாருடன் சிக்கந்தர் நெருங்கி பழகிவந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அவர்களை விசாரித்தனர். அதில் மாமியாருடன் சிக்கந்தருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அங்கு பஞ்சாயத்தை கூட்டினர். அதில் இருவரும் ஒப்புக் கொள்ளவே, கிராமத்தினர் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மேலும், இருவரும் நீதிமன்றத்திலும் திருமணம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாமியாரை மருமகன் செய்து கொண்ட திருமண செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார்.
    • விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டி ஆண்டிக்குட்டைய சேர்ந்தவர் மருதை (வயது 60) இவர் தனது மகள் தனலட்சுமியை கடநத 15 ஆண்டுகளுக்கு முன்பு கெங்கவல்லி அருகே உள்ள உலி புரம் புங்கமரத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதில் 2 மகள்களும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சரவணன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி நாகியம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    அன்று இரவு 10 மணியளவில் நாகியம்பட்டி சென்ற சரவணன் தனது மாமனார் மருதையிடம் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். நீ சந்தேகப்பட்டு அடிப்பதால் அவளை உன்னுடன் அனுப்ப முடியாது, நீ இங்கிருந்து சென்று விடு என்று கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் தகராறு செய்ததால் அருகில் கிடந்த கம்பை எடுத்து பின்னால் விரட்டியுள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.

    இந்நிலையில் நேற்று அங்குள்ள அய்யப்பன் கோவில் அருகில் இருக்கும் ஆலமரத்தின் அடியில் மருதை பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

    போலீசார் சரவணனை தேடிய போது தலைமறைவானதும், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனது மனைவி என்னுடன் கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவளை நான் அழைக்க சென்றபோது எனது மாமனார் மருதை என்னை அடித்து விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காட்டுப்பகுதியில் வைத்து அவரை கல்லால் தாக்கினேன், இதில் காயம் அடைந்த அவர் இறந்துவிட்டார், அங்கிருந்து தப்பி கேரளா சென்றேன், ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார்.

    பல்லடம் :

    பல்லடத்தைச் சேர்ந்தவர் குமார்( 60) பனியன் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா(55) இவர்களது மகளும், பல்லடம் காரணம்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் மகன் அருணாச்சலம் (48) என்பவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக அருணாச்சலத்துக்கு அதிகமான குடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தன்று மது போதையில் இருந்த அருணாச்சலம் வசந்தாவின் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டதுடன், வசந்தாவின் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த வசந்தா, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருணாச்ச லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார்.
    • உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது.

    போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள். குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள்.

    கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடிக்க முடிவு செய்தார்.

    அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும்.

    முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

    அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

    • மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை எழுமலை இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 39). இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் மகளுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முத்து ராஜா புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார். இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மாமனார் பிரபாகரன் (48), மாமியார் பிச்சைமணி (45) மற்றும் மகன் பிரபு (28) ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று முத்துராஜா வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இரும்பு கம்பி, மண்வெட்டியால் முத்துராஜாவை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    எனவே முத்துராஜா இதுதொடர்பாக, எழு மலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, பிரபாகரன் மற்றும் பிச்சைமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதே வழக்கில் பிச்சை மணி கொடுத்த புகாரின் பேரில் முத்துராஜாவை யும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மாமனாரின் சொத்து பத்திரங்களுடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • நெல்லை வந்த தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் சிம்சோன் (வயது75). இவருக்கும், இவரது மகளின் கணவரான ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு இடையே சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

    முதியவர் கொலை

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் முருகன், சிம்சோனை கொலை செய்தார். மேலும் அவரது உடலை சாக்குமூட்டையில் வைத்து கிணற்றில் வீசி முயன்ற போது போலீசார் பார்த்துவிட்டனர். உடனே அவர் தப்பி சென்றுவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. லயோலா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மாமனாரின் சொத்து பத்திரங்களுடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நெல்லை சென்ற தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரத்தில் மாமனாரை குத்திக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசபிள்ளை பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி கலைச் செல்வியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கலைச் செல்வி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கலைச் செல்வி நடந்து சென்று கொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த வேலுச்சாமி அவர் மீது மோதினார். இதனால் கலைச் செல்வி கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் கலைச் செல்வியின் தந்தை கருப்பணகவுண்டர் சம்பவ இடத்துக்கு வந்து மருமகன் வேலுச்சாமியை கத்தியால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி தனது மாமனார் வைத்திருந்த கத்தியை பறித்து அவரையே குத்தினார்.

    படுகாயமடைந்த 2 பேரும் ஒட்டன்சத்திரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கருப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

    வங்கியில் கடன் வாங்கிய தகராறில் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சுமதி. இவர் பாப்ஸ்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் தேவி. தேவிக்கும் லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (31) என்பவருக்கு திருமணம் நடந்தது.

    பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் கதவு செய்யும் கடை வைத்துள்ளார். கடைக்கு ஒருவங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இதற்கு அவரது மாமியார் சுமதி சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார். ஒரு சில மாதங்களில் கடையையும் மூடிவிட்டு, வாங்கிய கடனையும் கட்டாமல் பன்னீர் செல்வம் நிறுத்தி விட்டார்.

    மேலும் பணம் கட்டாததாலும், கடையை மூடிவிட்டதாலும் வங்கியில் இருந்து மாமியார் சுமதியிடம் சென்று பணம் கட்டுமாறு கூறினர். அதற்கு மாமியார், மருமகன் பன்னீர் செல்வத்தின் செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் மாமியார் சுமதி வேலைபார்க்கும் பாப்ஸ்கோ கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் பன்னீர் செல்வம் மாமியார் சுமதியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இதுகுறித்து சுமதி லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்குளி அருகே மாமனாரை குத்தி கொன்ற மருமகன் கைது கடனை திருப்பி தராததால் கொன்றதாக வாக்கு மூலம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொலக் கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (54) சத்துணவு ஊழியர். இவரது மகள் வனிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்தருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து வனிதா தனது தந்தை சுந்தரேசனுக்கு தகவல் தெரிவித்தார்.அவர் தகராறை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்தர் கத்தியால் சுந்தரேசனை குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனது மாமனார் சுந்தரேசன் என்னிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ. 30 ஆயிரத்தை வாங்கி தரும்படி மனைவியிடம் தெரிவித்தேன். அவர் வாங்கி தர மறுத்தார். இதனால் மனைவியிடம் தகராறு செய்தேன். அவர் தனது தந்தைக்கு போன் செய்தார். இதனை தொடர்ந்து சுந்தரேசன் எனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு உருவானது. அவரை கத்தியால் குத்தினேன். இதில் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×