search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் விநோதம்: மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பீகாரில் விநோதம்: மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்

    • மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார்.
    • இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை விசாரித்தனர்.

    பாட்னா:

    பீகாரில் பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் இவருக்கு திருமணமானது.

    இதற்கிடையே, மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார். அங்கு தன் மாமியாருடன் சிக்கந்தர் நெருங்கி பழகிவந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அவர்களை விசாரித்தனர். அதில் மாமியாருடன் சிக்கந்தருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அங்கு பஞ்சாயத்தை கூட்டினர். அதில் இருவரும் ஒப்புக் கொள்ளவே, கிராமத்தினர் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மேலும், இருவரும் நீதிமன்றத்திலும் திருமணம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாமியாரை மருமகன் செய்து கொண்ட திருமண செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Next Story
    ×