ஆடி மாதம் முடிந்து வீட்டிற்கு வந்த மருமகனுக்கு தடபுடல் விருந்து.. 100 வகையான உணவு சமைத்து அசத்திய மாமியார்

ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு விருந்து.விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.
ஆடி மாதம் முடிந்து வீட்டிற்கு வந்த மருமகனுக்கு தடபுடல் விருந்து.. 100 வகையான உணவு சமைத்து அசத்திய மாமியார்
Published on

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குட்பட்ட, தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் ஆடி மாதம் போன்று ஆந்திரா மாநிலத்தில் ஆஷாதா மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதம் ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆகும்.

இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரி வீட்டில் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.

விருந்தில், இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.

பிரமாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவிதேஜா," ஒரே இடத்தில் 100 வகையான உணவுகளை கண்டது மகிழ்ச்சி. மாமியாரின் இச்செயல் தன்னை மிகுந்த ஆச்சரியத்தில ஆழ்த்தியது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com