என் மலர்
சினிமா செய்திகள்

கேரளாவில் "சிறந்த பிறமொழித் திரைப்படம்" விருதை வென்றது 'அமரன்'
- கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் அமரன் படத்திற்கு விருது.
- 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் வந்தது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர்.
கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு கேரள அமைச்சர் வாசவனிடம் விருதை பெற்றுக்கொண்டார்.
Next Story






