367வது படம்...தேசிய விருதுப் பெற்ற இயக்குநருடன் கைக்கோர்க்கும் மோகன்லால்!

மேப்படியான் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதை விஷ்ணு மோகன் பெற்றுள்ளார். மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது
367வது படம்...தேசிய விருதுப் பெற்ற இயக்குநருடன் கைக்கோர்க்கும் மோகன்லால்!
Published on

நடிகர் மோகன்லாலின் 367வது படத்தை இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது படக்குழு. கோகுலம் கோபாலன் தனது ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், இந்திய அரசின் ஆபரேஷன் கங்காவை அடிப்படையாக கொண்ட கதை என தகவல்கள் பரவிவருகிறது.

உன்னி முகுந்தன் மற்றும் அஞ்சு குரைன் நடித்த மேப்படியான் படம்மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் விஷ்ணு மோகன். இன்னுவாரே எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் மோகன்லால் உடன் இணைந்துள்ளார். துடரும் படத்திற்குப் பிறகு, தற்காலிகமாக எல் 366 என்று பெயரிடப்பட்டுள்ள தனது 366வது படத்திற்காக தருண் மூர்த்தியுடன் மீண்டும் இணைகிறார் மோகன்லால். இதனைத்தொடர்ந்து இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

இதனிடையே மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

X

Maalai Malar
www.maalaimalar.com