search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meghamalai"

    • அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
    • கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை சீசனின்போது அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு புனிதநீராடி செல்கின்றனர். கடந்த மாதம் சுற்றுலா வந்த சென்னை மாணவி மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலியானார். இதனை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 27ம் தேதி கேரள வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் அரிசிகொம்பன் யானை புகுந்தது. கம்பம் நகரில் அட்டகாசம் செய்து பின்னர் சுருளிபட்டி பகுதியில் முகாமிட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அங்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது யானை அச்சம் முழுவதும் விலகியுள்ளதால் சுருளி அருவி மற்றும் மேகமலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.

    மேகமலையில் தந்தத்திற்காக யானைகள் கொலை செய்யப்பட்டதா? என்று வன உயிரின கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதியில் உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 5 யானைகள் ஒரே இடத்தில் பலியாகின. இது குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. யானைகள் தொடர்ந்து பலியாவதை தடுக்க வனத்துறையினர் மற்றும் மின்சாரத்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேகமலை வன உயிரின சரணாலயத்தில் அடிக்கடி யானைகள் உயிரிழப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக வண்ணாத்திப்பாறை பகுதியில் வன உயிரின ஊழியர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே ஆண் யானை இறந்து கிடந்தது. அந்த யானையின் தந்தத்தை விற்க முயன்றபோது 2 பேர் பிடிபட்டனர். இதனால் சரணாலய பகுதியில் யானைகள் உயிரிழப்பது இயற்கையாகவா? அல்லது கொலை செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது.

    மேகமலை வனப்பகுதியில் உயர்அழுத்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியது. இதுவரை மின்சாரம் தாக்கி யானைகள் பலியானதே கிடையாது. 2 யானைகள் உயிரிழந்து இதுவே முதல்முறை.

    எனவே தந்தத்தை வேட்டையாடுவதற்காக யானைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்தனர். இதனையடுத்து மாநில கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் லிமோட்டசி தலைமையில் வன உயிரின அதிகாரிகள், மேகமலை வன காப்பாளர் கலாநிதி, வன பாதுகாவலர் புவனேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இக்குழுவினர் வண்ணாத்திப்பாறையில் யானை இறந்து கிடந்த இடத்தையும் ஆய்வு செய்ததோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வனப்பகுதியில் அடிக்கடி நடமாடும் நபர்களை விசாரிக்க திட்ட மிட்டுள்ளனர். விரைவில் இதில் உண்மை வெளிவரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ×