search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtalam Falls"

    • விஜயகாந்திடம் அப்போது சினிமா ஆர்வமோ, அரசியல் ஆர்வமோ இருந்தது இல்லை.
    • சினிமாவில் நடிக்க தொடங்கிய பின்னர் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றுள்ளார்.

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளியிலும் விஜயகாந்த் படித்துள்ளார். அங்குள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் 1966-ம் ஆண்டு 9 மற்றும் 10-ம் வகுப்பை படித்த விஜயகாந்த்தின் பள்ளி தோழர் பால சுப்பிரமணியம் அவருடனான நட்பை மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "விஜயகாந்த்துடன் ஒரே பெஞ்சில் தான் அமர்ந்து படித்துள்ளேன். ராமலிங்கம், ஜெயச்சந்திரன் ஆகிய மாணவர்களும் எங்களோடு அமர்ந்து படித்துள்ளனர். விஜயகாந்திடம் அப் போது சினிமா ஆர்வமோ, அரசியல் ஆர்வமோ இருந்தது இல்லை. அனைத்து நண்பர்களிடமும் சகஜமாக பேசி பழகும் குணம் கொண்டவராக திகழ்ந்த விஜயகாந்த்துடன் குற்றால அருவியில் போய் குளித்துள்ளோம். பாபநாசம், தாமிரபரணி ஆற்றிலும் குளியல் போட்டு உள்ளோம். எனது வீட்டில் இருந்து நான் எடுத்துச் சென்ற உணவுகளையெல்லாம் ருசித்து சாப்பிட்டுள்ளார். சினிமாவில் நடிக்க தொடங்கிய பின்னர் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றுள்ளார்.

    பொள்ளாச்சியில் மின் வாரியத்தில் நான் பணியாற்றிய போதும் படப் பிடிப்பில் பங்கேற்றுள்ளேன். அவரது மரணம் மிகுந்த வேதனையை தருகிறது" என்றார்.

    • மழை இல்லாததால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியுள்ளது.
    • குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் குளித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியுள்ளது.

    ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் மிதமாக விழும் தண்ணீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலரும் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சபரிமலைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருப்பதால் அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் குளித்தனர். 

    • மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • சாரல் மழை நீடித்தால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை என்பதால் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்தனர்.

    மேலும் வெளியூர்களில் இருந்தும் குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்தனர்.

    இன்று காலையில் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் வந்து குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவி கரைகளை ஒட்டி அமைந்துள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை வாங்கி ருசித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டி காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள் முழுவதும் காலை முதல் வெயில் மற்றும் காற்று வீசி வருகிறது. சாரல் மழை நீடித்தால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர் சாரல் மழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மாலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அருவிக்கரைகளில் இருந்த மங்குஸ்தான், ரம்புட்டான் உள்ளிட்ட கேரள சீசன் பழங்களை ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
    • ஐந்தருவியில் கார்கள் மற்றும் வேன்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக வார நாட்களில் சற்று கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில், நேற்றும், இன்றும் வார விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் குற்றாலத்தில் அலைமோதியது.

    இதனால் அருவிகளில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். மேலும், அவர்கள் அருவிக்கரைகளில் இருந்த மங்குஸ்தான், ரம்புட்டான் உள்ளிட்ட கேரள சீசன் பழங்களை ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். இதேபோல் சுடச்சுட கடைகளில் வைக்கப்பட்டு இருந்த மிளகாய் பஜ்ஜி உள்ளிட்டவற்றையும் வாங்கி சாப்பிட்டனர். விடுமுறை நாள் என்பதால் அருவிக்கரைகள் முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.

    குறிப்பாக ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மெயினருவியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். ஐந்தருவியில் கார்கள் மற்றும் வேன்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    பழைய குற்றாலம் அருவியில் குடும்பத்துடன் வந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் செண்பகாதேவி அருவி, புலியருவியிலும் மிதமான தண்ணீர் கொட்டியது. அங்கும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ×